Thursday, June 11, 2020

இனிமே நாங்க VEELOOR



"கிடக்கறது கிடக்கட்டும், கிழவனைத் தூக்கி மனையில வை" 

என்ற கதையாக ஆயிரம் ஊர்களின் ஆங்கில SPELLING ஐ மாற்றியுள்ளது தமிழக அரசு.



அதன் படி VELLORE இனி VEELOOR

நியுமராலஜி  பார்த்திருப்பார்களோ?

கொரோனா காலத்தில் அரசு எதற்கு முன்னுரிமை கொடுக்கிறது பாருங்கள்.


ஒரு பழைய படத்தில்

"என் நாய் இறந்து போச்சு. அதுக்கு பெயரெல்லாம் வைச்சேன்"

என்று நண்பன் நாகேஷிடம் சொல்ல

"பேரு வச்சியே! சோறு வச்சியா?"

என்று நாகேஷ் கேட்பார்.

அது போல பெயர் மாற்றுவது முக்கியமல்ல. அந்த ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு முன்னுரிமை கொடுங்கள் மிஸ்டர் எடப்பாடி,

பிகு: தனி மாவட்டமான ராணிப்பேட்டையையும் வேலூர் மாவட்டத்தின் கீழேயே கொண்டு வந்துள்ளார்களே! அம்மாவட்டம் மறுபடியும் வேலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு விட்டதா?

No comments:

Post a Comment