Thursday, June 4, 2020

புது காரணம் கண்டுபிடிங்கடா . . .


கேரளாவில் பெண் யானைக்கு நிகழ்ந்தது எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கொடூரம். 

குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம் என்று கேரள முதல்வர் தோழர் பிணராயி உறுதிபட கூறியுள்ளார். சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாத தலைவர் அவர். அது நிச்சயம் நடக்கும். 



ஆனால் சங்கிகள் இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டு இடது முன்னணி அரசையும் கேரளாவையும் இழிவு படுத்த துவங்கி விட்டார்கள்.

மனிதர்களைப் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாமல் மிருகங்கள் மீது மட்டுமே அக்கறை உள்ளதாக காண்பித்துக் கொள்ளும் மேனகா அம்மையார் ( தெரு நாய்களை கொல்லக் கூடாது என்று இவர் சட்டம் போட்டதையும் உடனடியாக சின்ன டாக்டர், நாய்க்கடிக்கான தடுப்பூசி மருந்து தயாரிக்கும் குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டிடியூட் உட்பட பொதுத்துறை நிறுவங்களை மூடி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்க முயற்சித்ததை மறந்து விடாதீர்கள்) சங்கிகளூக்கே உரிய இலக்கணத்தோடு "மலப்புரம் மாவட்டம் குற்றச்செயல்களுக்கு பெயர் போனது" என்று ஆரம்பிக்கிறார். மலப்புரம் மாவட்டத்தில் இஸ்லாமியர்கள்தான் பெரும்பான்மை என்பது உங்களுக்கு தெரிந்திருந்தால் மேனகா அம்மையாரின் விஷம் புரிந்திடும். மேலும் சம்பவம் நடந்தது பாலக்காடு மாவட்டத்தில். 



இன்னொரு அம்மையாரோ இந்த பாவச்செயலால் ஒட்டு மொத்த கேரளாவே அழிந்து போய் விடப்போகிறது என்று சாபமிட்டுள்ளார்.

ரௌடி திருப்பதி நாராயணனோ யானை என்ன மதம் என்று கண்டுபிடித்து ஒரு பதிவிட்டுள்ளார்.



இவையெல்லாம் மனிதர்கள் கொத்து கொத்தாக சாவது பற்றி கவலைப்படாத ஜென்மங்கள்.

கம்யூனிஸ்டுகள் மனிதர்களுக்காகவும் கவலைப்படுவோம், மிருகங்களுக்காகவும். 

கொரானா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக உலக அளவில் தோழர் பிணராயி விஜயன் அரசு பாராட்டப்படுவதால் உருவான காழ்ப்புணர்வு அன்றி வேறெதுமில்லை. 

அவர் அரசின் நிழலைக் கூட நெருங்க அருகதையற்ற நீங்கள், வேறு ஏதாவது புதிய காரணங்களை, புதிய கட்டுக்கதைகளை உற்பத்தி செய்ய முயற்சியுங்கள்.

உங்களுக்கு தெரிந்தது அது மட்டும்தானே அற்பப்பதர்களே!


1 comment:

  1. சிறப்பான கண்ணோட்டம்

    ReplyDelete