Wednesday, June 24, 2020

பாஜக தலைவியின் கொலை மிரட்டல்



வேறு வழியில்லை. தினத்தந்தி போலத்தான் தலைப்பு கொடுக்க வேண்டியுள்ளது.



மேலே உள்ளவர் பாரதீய ஜனதா கட்சியின் தென் சென்னை மாவட்ட துணைத்தலைவியாம்.

உடுமலைப்பேட்டை சங்கர் வழக்கில் தீர்ப்பு வந்ததும் உடனடியாக அதை வரவேற்று ஒரு பதிவு போடுகிறார்.



அடுத்த பத்து நிமிடங்களில் போடுகிற இன்னொரு பதிவு.



கௌசல்யாவை பிளக்கத்தான் அவர் தந்தை வருகிறார் என்று.

ஒரு இரண்டு மணி நேரம் கழித்து இன்னொரு பதிவு. அதை கடைசியில் பகிர்கிறேன். காரணம் இருக்கிறது.

இரவு இன்னொரு பதிவு.

அது அயோக்கியத்தனமானது மட்டுமல்ல, அப்பட்டமான கொலை மிரட்டலும் கூட.




கௌசல்யாவை போட்டுத் தள்ளப்போகிறார்கள் என்று இந்தம்மாவிற்கு எப்படி தெரியும்? கொலை செய்ய சதித்திட்டம் நடக்கிறதா? அந்த சதித்திட்டத்தில் இந்தம்மாவும் ஒரு கூட்டாளியா? மகளையும் கொன்று விடு என்று கௌசல்யாவின் அப்பா சின்னச்சாமிக்கு ஆலோசனையும் தைரியமும் தருகிறதா இந்தம்மா? நிச்சயமாக இது கொலை மிரட்டல்தான்.

இப்படி எழுதுவதற்கான திமிர் எங்கிருந்து வருகிறது?

மத்தியில் ஆளுகின்ற கட்சியின் மாவட்ட துணைத் தலைவி என்பதும் மாநில ஆளும் கட்சி பாஜகவின் எடுபிடியாக இருப்பதும்தானே! நியாயப்படி பார்த்தால் இந்தம்மாவை காவல்துறை கைது செய்ய வேண்டும். எடுபிடி அரசுக்கு அவ்வளவு தைரியமெல்லாம் கிடையாது.

நேற்று ஒரு பதிவு போட்டுள்ளார்.



இப்படி இளம் விதவைகளுக்காக கவலைப்படுகிற, இளைஞர்கள் அவர்களை மறு மணம் செய்து கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிற மயிலை ரமா அம்மையார் தீர்ப்பு வந்த அன்று மறுமணம் செய்து கொண்ட கௌசல்யா பற்றி எழுதியதை பற்றி படியுங்கள்



இவர் இளம் விதவைகளைப் பற்றி கவலைப்படுவதாக கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பதிவு போடுகிறார்.

மொத்தத்தில் பாஜகவில் மோடி தொடங்கி கீழே உள்ளவர்கள் வரை அனைவரும் கீழ்த்தரமான சிந்தனை உடைய கிரிமினல்களாகத்தான் இருக்கிறார்கள்.

பிகு 1: மேலே அனைத்துமே அவரது முகநூல் பக்கத்திலிருந்து நானே ஸ்க்ரீன் ஷாட் எடுத்தவைதான்.

பிகு 2 : இந்தப் பெண்மணிக்கு யார் முட்டு கொடுத்தாலும் அவர்களும் கீழ்த்தரமான சிந்தனை கொண்ட கிரிமினல்களே

No comments:

Post a Comment