Saturday, June 6, 2020

கல்யாணத்திற்கு RAC அழைப்பு




வாட்ஸப்பில் வந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு ஒரு திருமண அழைப்பு வந்தது. அதிலே RAC 1 என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தார்கள்.

அது என்ன RAC 1 என்று அறிந்து கொள்ளும் ஆவலில் பத்திரிக்கை அனுப்பியவரை தொலைபேசியில் அழைத்தேன்.

ஐம்பது பேர் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. ஏற்கனவே ஐம்பது பேருக்கு அழைப்பு அனுப்பி விட்டேன். நீங்கள்  51 வது நபர். ஐம்பது பேரில் யாராவது ஒருவர் வரவில்லை என்றால் உங்களுக்கு தகவல் வரும். அப்போது நீங்கள் திருமணத்தில் கலந்து கொள்ளலாம் என்றார்.

நான் அப்படியே வாயடைத்துப் போய் விட்டேன்.

இன்றுள்ள நிலைமையில் இது போல நடந்தால் ஆச்சர்யப்படுவதற்கு ஏதும் இல்லை.

பிகு

எனக்கு வந்த வாட்ஸப்பை ஃபார்வர்ட் செய்த போது ஒரு தோழர் “இதில் எமர்ஜென்சி கோட்டா இருக்குமா என்று கேட்டார்.

என்னிடம் பதில் இல்லாமல் சும்மா ஒரு சிரிக்கும் ஸ்மைலியை போட்டு வைத்தேன்.

1 comment:

  1. ஆகா!
    கதை அப்படிப் போகுதோ?

    ReplyDelete