Wednesday, June 10, 2020

ஜெமோ கோ.கி ஆக முடியாது




சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறேன் என்று ஜெயமோகன் மிரட்டினார்.

அதை யாராவது மதித்தார்களா?
பயந்தார்களா?
பதுங்கி பம்மினார்களா?
சங்கிகள் போல மன்னிப்பு கேட்டார்களா?

டெம்போ எல்லாம் வச்சிருக்கேன். பாத்து போட்டுக் கொடுங்க என்றதற்கு கவுண்ட மணி பதில் சொன்ன ரீதியில்தான் ஜெமோவின் மிரட்டலுக்கு மரியாதை கிடைத்துள்ளது.

ஜெமோவின் மிரட்டல்களுக்கான சில எதிர்வினைகளைப் பாருங்கள்.

“உளறு வாயன்” என்று ஜெயமோகனை எப்போதும் அன்புடன் அழைக்கிற தோழர் ஆதவன் தீட்சண்யா, புரட்டி புரட்டி அடித்து விட்டார்.

சேட்டைக்கு ஈடாக அடியுதை வாங்குறப்ப எங்கப்பன் கிட்ட சொன்னா என்னாகும் தெரிடுமான்னு சிறுபிள்ளைத்தனமா திமிறும் குரல் கேட்குதா கேட்குதா?

*************************************************************************************
ஈரோடு, சென்னையை தொடர்ந்து அமெரிக்கா, அண்டார்டிகா, அண்டாசைஸ் கத்திரிக்கா ஆகிய நகரங்களிலும் வழக்கறிஞர் அணி கூடுதாம். ஓடி ஒளிங்க
************************************************************************************
தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ளும் பதைப்பில் தன் பெயருக்கு முன்னால் எஎழுழுத்த்தாதாளளர்ர் என எழுதிக் கொள்வது மட்டும்தான் பாக்கி
***************************************************************************************
தத்துவஞான மரபு, உள்ளொளி தரிசனம்லாம் ஒரு சங்கிக்கு தொடர்ந்து செட்டாகாது. காட்டிக் கொடுக்கும் தொழில்தான் கச்சிதமா பொருந்துது பாருங்க
*****************************************************************************************
வெற்றி வெற்றி மகத்தான முதற்கட்ட வெற்றி . . .நகல் எடுக்கும் பணி முடிவடைந்தது. அடுத்து பக்கவாரியா அடுக்கனும். பிறகு பைன்ட் செய்யனும்.
*****************************************************************************************
அரசுப்பணியில் இருக்கிற எழுத்தாளர்களை அரசுக்கு "காட்டிக் கொடுப்போம்"னு உளறி உனக்குள்ளிருக்கும் சங்கியை இப்படி காட்டிக் கொடுத்திட்டியே!
*****************************************************************************************


தோழர் ஏ.ஏ.கரீம்

ஜெயமோகனின் கோபத்திற்கு நேரடியாக ஆளான புலியூர் முருகேசன் வகையறாவை வாழ்த்தலாமே பிரண்ட்ஸ்...

இதுல அரசு ஊழியர்கள் யாருனு தெரியல. என் ஆசான் கருப்பு கருணா மீது மட்டும் வழக்கு தொடர்ந்தால் கடுப்பாகிடுவேன். அம்புட்டு தான் சொல்லுவேன். அய்யய்யோ சத்தம் போட்டு பேசிட்டேனே.

தோழர் சம்சுதீன் ஹீரா



ஆஜானை ரொம்பவும் கலாய்க்கறீங்களாமா? அரசுக்கு மொட்டை பெட்டிசன் வந்திருக்கு. யூ ஆர் ஆல் அண்டர் அரஸ்ட். மரியாதையா சரண்டர் ஆகிடுங்க..!!

குறிப்பு: முன் ஜாமீனுக்காக Kareem Aak Prathaban Jayaraman போன்ற வக்கீல் சிறுவர்களை அனுக வேண்டாம். அவங்க பேரும் ஆல்ரெடி என்கவுண்டர் லிஸ்ட்ல இருக்கு...!!

 


யார் யாரு என்னைச் செயிலில் வந்து பார்ப்பீங்க? 

தோழர் புலியூர் முருகேசன்

ஆஜானின் ஜாதி அரிப்பைக் கண்டித்து புலியூர் முருகேசன் போட்ட பதிவொன்றில் லைக் இட்ட 247 நபர்கள் மீதும், ஆஜானைக் கலாய்த்துப் பின்னூட்டமிட்ட 742 நபர்கள் மீதும், மானசீக நதியான சரஸ்வதி மானசீகமாக ஓடியதைப் போல மானசீகமாக கண்டனம் தெரிவித்த முப்பத்து முக்கோடி தேவர்கள் மீதும், கவுண்டர்கள் மீதும், வன்னியர்கள் மீதும் நாடார்கள் மீதும், ஜாதிக்குத் துரோகம் செய்த பார்ப்பனர்கள் மீதும், இன்ன பிற சூத்திர ஜாதி என அடையாளப்படுத்தப்பட்டவர்கள் மீதும்....

(ஸ்ஸ்ஸ்..யப்பா...) அவதூறுக்கு அவதூறு வழக்குத் தொடுக்கப்படும்
- இப்படிக்கு ஈரோடு வழக்குறைஞ நண்பர்கள் (அதாவது ஆஜானின் விழுதுகள்)


தோழர் கருப்பு கருணா

உங்க வாழ்க்கையில் உங்களை ரொம்ப அவதூறுக்குள்ளாக்கியது அந்த புளிச்சமாவு பாக்கெட்டுதான். முதல் வழக்கை அதன்மீது போடுங்க ..

****************************************************************************************

Kareem Aak Samsu Deen Heera புலியூர் முருகேசன் போன்ற எனது நலம்விரும்பிகளுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் நினைக்கிறமாதிரி அவர் என்மீது வழக்கெல்லாம் போடமாட்டார்.அதற்கு தொன்றுதொட்டு தொடரும் ஒர் காரணம் இருக்கு.



அதே போல இந்த பதிவுகளுக்கான பின்னூட்டங்கள் எல்லாம் ஜெமோவை ஒரு காமெடி பீஸாக  மட்டுமே பார்க்கிறது.

பதிவுகளும் சரி, அவற்றுக்கான பினனூட்டங்களும் சரி, அவை செல்லும் செய்தி ஒன்றுதான்.

என்னதான் ஜெமோ தன்னை கோபால கிருஷ்ணன் என்று அழைக்கச் சொல்லி கெஞ்சிப்பார்த்தாலும் சரி, மிரட்டிப் பார்த்தாலும் சரி, அவரால் என்றுமே கோபால கிருஷ்ணன் ஆக முடியாது.

ஜெயமோகனின் அல்லக்கைகளில் முக்கியமானவரான லட்சுமி மணிவண்ணன்,  கண்டன அறிக்கையில் கையெழுத்திட்டவர்களை முக நூலில் ஜெமோ மாதிரியே திட்டி எழுதிவிட்டு மிரட்டலான படம் என்ற நினைப்பில் ஜெமோவின் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அதைப் பாருங்கள் நீங்களும் வாய் விட்டு சிரிப்பீர்கள், என்னைப் போல



குழந்தைகளுக்கு பூச்சாண்டி காண்பிக்கக் கூட உதவாத படம்.


No comments:

Post a Comment