Tuesday, June 16, 2020

உலக மகா பல்டி எடப்பாடி


எடப்பாடி நம்பிக்கை தீர்மானம் முன் வைக்கையில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது கோஷ்டியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏ க்களுக்கு தாங்கள் கொறடா உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்றும் அப்படி வாக்களிக்குமாறு அவர்களை கேட்காததால் அவர்கள் எதிர்த்து வாக்களித்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று எடப்பாடி, சட்டப்பேரவை சபாநாயகருக்கு பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.

உலக மகா பல்டி என்பது இதுதான்.

தினகரன் வகையறாக்கள், எடப்பாடி மீது நம்பிக்கை இல்லை என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்தாலே பதவியை பிடுங்கிய சபாநாயகர், எதிர்த்து வோட்டே போட்டவர்களை ஒன்றும் செய்யப் போவதில்லை.

சட்டம் மட்டும் இருட்டறையில் இல்லை. அதை பரிபாலனம் செய்பவர்களும் கூட



No comments:

Post a Comment