Wednesday, June 10, 2020

அஞ்சலியும் கூடவே ஒரு அக்கறையும்




திமுகவின் மாவட்டச் செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான திரு ஜே.அன்பழகன் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது.

மக்கள் நலப் பணிகளில் முன் நின்ற ஒர் ஆளுமை என்பது  திமுக உறுப்பினர்கள் அல்லாத பலரும்  கூட  அவருக்கு எழுதிய அஞ்சலி செய்திகளிலிருந்து தெரிகிறது.

கொரோனா காலத்தில் கூட நிவாரணப் பணிகளை வேகமாக முன்னெடுத்துள்ளார்.

மறைந்த திரு அன்பழகன் அவர்களுக்கு மனமார்ந்த அஞ்சலியை உரித்தாக்குகிறேன்.

கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவுகிறது. அனைவரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதிலே மக்கள் நலப் பணிகள் செய்கிற, மக்களுக்காக களத்தில் நிற்கிற அனைவரும் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய அவசியத்தை திரு அன்பழகன் தன் மறைவின் மூலம் சொல்லியிருக்கிறார்.

தொடர் தளர்வுகள் மூலம் அரசு மக்களை கை கழுவி விட்டு விட்டது.
மக்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment