Thursday, June 4, 2020

இவர்கள் எல்லாம் மனிதர்கள்தானா?




கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் ஒரு காட்டு யானை ஒரு கிராமத்திற்குள் நுழைந்துள்ளது. பசியால் உணவுக்கு அலைந்த அந்த யானைக்கு ஒரு கொடியவன் அன்னாசிப்பழத்தை அளித்துள்ளான். உணவு அளிப்பவனைப் போல கொடியவன் என்று கூறுவதா என ஒரு கேள்வி உங்களுக்கு வரலாம்.

அன்னாசிப் பழத்திற்குள் வெடியை பற்ற வைத்து கொடுத்திருக்கிறான். அந்த வெடி வயிற்றுக்குள் வெடித்து மூச்சு திணறி அந்த யானை இறந்துள்ளது.

இறப்பதற்கு முன்பாக  தன் வெப்பத்தை தணிக்க ஒரு குளத்திற்குள் இறங்கி நான்கு மணி நேரம் நின்று அந்த குளத்திற்குள்ளேயே இறந்துள்ளதே தவிர, வெறி கொண்டு ஊருக்குள் நுழைந்து யாரையும் தாக்கவில்லை.

உணவுக்காக அலைந்த ஒரு பிரம்மாண்டமான மிருகத்தை ஒரு வெடி கொண்டு  வீழ்த்தியவனெல்லாம் மனிதன் என்றழைக்கப்படுவதற்கே அருகதை அற்றவர்கள். யாரெல்லாம் இதற்கு காரணமோ, அவர்களை எல்லாம் சிறையில் அடைக்க வேண்டும்.

அந்த பெண் யானைக்கு பிரேதப்பரிசோதனை செய்த பின்புதான் இன்னொரு கொடுமையும் நிகழ்ந்துள்ளது  தெரிய வந்திருக்கிறது.

ஆம்.

அந்த யானை கர்ப்பமாக இருந்திருக்கிறது.


No comments:

Post a Comment