Monday, June 22, 2020

கொரோனா, சீனா எல்லாம் பொருட்டே அல்ல



கொரோனாவிலிருந்து எப்போது விடுதலை? தெரியாது

எல்லையில் பதற்றம் எப்போது தணியும்? தெரியாது.

இதைப் பற்றியெல்லாம் மோடி அரசுக்கு நிஜமாகவே கவலை இருப்பதாக நீங்கள் நினைத்தால் ஒன்று நீங்கள் சங்கியாக இருக்க வேண்டும் அல்லது குழந்தை உள்ளம் படைத்த அப்பாவியாக இருக்க வேண்டும்.

இந்தியாவை கார்ப்பரேட்டுகள் காலடியில் சமர்ப்பிப்பது என்பது மட்டுமே மோடி அரசுக்கு உள்ள அஜெண்டா.

இந்த பதற்றம் நிறைந்த காலத்திலும் நிலக்கரிச் சுரங்க ஏலம் நடக்கிறது.

இந்தியாவின் பொருளாதாரத்தையே தாங்கிக் கொண்டிருக்கிற எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்பதற்கு ஆலோசனை தருவதற்காக ஆலோசகர்களை நியமிப்பதற்கான ஏல அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியாவின் சொத்துக்கள் பறி போவதை வேடிக்கை பார்ப்பதுதான் தேச பக்தியா?

இந்தியாவின் செல்வத்தை அன்னியர் கொள்ளையடிக்காமல் பாதுகாக்க போராடுபவர்கள் தேச விரோதிகளா?

கடைந்தெடுத்த தேசத்துரோகிகளான சங்கிகள், மீதமுள்ள அனைவரையும்  தேச விரோதி என்று சொல்வதுதான் காலக் கொடுமை.



No comments:

Post a Comment