Tuesday, June 23, 2020

மிரட்டினாங்களா ஜட்ஜய்யா?


காலையில் போட்ட ஜகன்னாதர் தேர்த்திருவிழா குறித்த பதிவின் தொடர்ச்சி இது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வந்த செய்தியில் ஒரு குறிப்பிட்ட இடத்தை மட்டும் வட்டம் போட்டுள்ளேன் பாருங்கள்.




தடை விதித்த நீதிபதிகளுக்கு மிரட்டல் வந்தது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே கூறியுள்ளார்.

ஒடிஷா மாநில அரசு தொடங்கி பூரி சங்கராச்சார்யார் உட்பட பலரும் பல்டி அடித்ததே நீதிமன்றத்தின் முடிவு மாறியதற்கு காரணம் என்றும் கண்டிப்பாக மிரட்டல் காரணமாக இருக்காது என்று நம்புகிறேன்.

ஆனால் அப்படி மிரட்டுபவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டாமா யுவர் ஆனர்?

எங்க ஊர் புளிச்ச மாவு எழுத்தாளராலேயே அவரை புளிச்ச மாவு என்று வசை பாடியவர்களின் பட்டியலை அதுவும் மத வாரியாக பெற முடிகிற போது உங்களால் முடியாதா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகளையே மிரட்டுபவர்களை சும்மா விடலாமா?


No comments:

Post a Comment