Wednesday, September 2, 2020

எங்கே செல்வாய் அரசே?

 


 

முன்பு எப்போதோ படித்தது. முழுமையாக நினைவுக்கு வரவில்லை.

 

கடைசி சொட்டு தண்ணீரும் தீர்ந்து,

கடைசி பருக்கை சோறும் தீர்ந்த பின்,

அசைவதற்கு ஒற்றை இலை கூட

இல்லாத போதுதான்

பணத்தை சாப்பிட முடியாதென்று

உனக்குப் புரியும்.

 

சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக சொல்லப்பட்டது அது.

 

கோவிட் தொற்றுக்குப் பின் ஒட்டு மொத்த உற்பத்தி மிகவும் பாதிக்கப் பட்ட நாடுகளில் முன்னணியில் இருப்பது இந்தியா.

 


இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத அரசு மோடி அரசு. மயிலோடும் வாத்தோடும் நாயோடும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மட்டுமே தன் பொழுதை வெட்டியாக கழிக்கிற பிரதமரைக் கொண்ட பரிதாபத்திற்குரிய நாடு இந்தியா.

 

இப்படி அதல பாதாளத்தில் பொருளாதாரம் போய்க் கொண்டிருக்கிற சூழலிலே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கிற எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு தாரை வார்க்க முயற்சி செய்கின்றீர்களே மோடி வகையறாக்களே!

 

பங்குச் சந்தை சரிந்தால் கை கொடுப்பது எல்.ஐ.சி,

ரயில்வேவுக்கு கடன் வேண்டுமானால் கொடுப்பது எல்.ஐ.சி

சாலை அமைக்கவும் எல்.ஐ.சி,

பாலம் கட்டவும் எல்.ஐ.சி

மத்தியரசுக்கும் எல்.ஐ.சி

மாநிலங்களுக்கும் எல்.ஐ.சி.

 

இப்படி அள்ளி அள்ளி கொடுக்கிற எல்.ஐ.சி யில் நாளை தனியாரும் பங்குதாரராக வந்து

 

இதெல்லாம் அவசியமில்லை, என் லாபத்திற்கேறார் போல செயல்படு என்று

 

மிரட்டினால்

 

அரசுக்கு தேவையான நிதிக்கு எங்கு செல்வீர் புத்திமான்களே?

No comments:

Post a Comment