Monday, September 28, 2020

மாரிதாஸ் மேல போடுங்கய்யா வழக்கு

 


கொஞ்ச நாள் அடங்கியிருந்த மாரிதாஸ் மீண்டும் விஷத்தை கக்க ஆரம்பித்து விட்டான். 

இது அவன் போட்டுள்ள பதிவு.








இதிலே அவன் என்ன அயோக்கியத்தனம் செய்துள்ளான் என்பதை வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் வார்த்தையிலேயே சொல்கிறேன்.


Administrator என்பது நீதிமன்றம் நியமிக்கும் பதவி.

அவ்வாறான ஒரு கிறித்துவ ட்ரஸ்ட்டின் Administrator ஆக நீதிபதி( ஓய்வு) ஹரிபரந்தாமன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனே, இந்த போர்டு தாஸ் எனும் மாரிதாஸ்..அவரை கிறித்துவ கைக்கூலி என பதிவிட்டுள்ளான்.
நீதிபதி ஹரிபரந்தாமன், எம்.ஜி. ஆருக்கு சொந்தமான சத்யா ஸ்டுடியோ இருந்த இடத்தில் உள்ள ஜானகி கலைக்கல்லூரி நிர்வாகத்திற்கும் Administrator ஆக நியமிக்கப்பட்டவர். எனவே அவர் அதிமுக வா?
இந்த நாயை கைது செய்ய நீதிபதி அவர்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவன் நீதிபதி ஹரி பரந்தாமனை மட்டுமல்ல, அவரை அந்த பொறுப்பில் நியமித்த சென்னை உயர் நீதி மன்றத்தையுமே சேர்த்து இழிவு படுத்தி உள்ளான்.

இதுதான் உண்மையில் நீதிமன்ற அவமதிப்பு.

இதற்குத்தான் அவமதிப்பு வழக்கு போட்டு அவனை உள்ளே தள்ள வேண்டும்.

பிரஷாந்த் பூஷண், சூர்யா ஆகியோர் மீது பாய்பவர்கள், இவனை ஏன் எதுவும் சொல்வதில்லை.

ஆதிசேஷன் மீது பேப்பர் வெயிட்டை எறியும் அளவிற்கான கோபம் எல்லாம் திரைப்படங்களில் மட்டுதான் சாத்தியம் போல . . .

பிகு: மாரிதாஸுக்கெல்லாம் மரியாதை கொடுக்க என் விரல்கள் ஏனோ அனுமதிக்கவில்லை. அதுவே ஸ்பான்டேனியஸாக அவன், இவன் என்றுதான் தட்டச்சுகிறது. இருந்தாலும் தோழர் பிரதாபன் பதிவிலிருந்த எச்.ராசா பிரபல வார்த்த ஒன்றை எடுத்து விட்டேன்






No comments:

Post a Comment