Tuesday, September 22, 2020

அண்டா பிரியாணி திருட்டு தினம்

 


வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் முக நூலில் நினைவு படுத்தினார்.  2016 ம் வருடம் இதே நாளில்தான் சங்கிகள் காவல்துறை ஆசியோடு வெறியாட்டம் ஆடினார்கள்.

 தனிப்பட்ட காரணங்களால் கொல்லப்பட்ட சசிகுமார் என்ற சங்கியின் மரணத்திற்கு மதச்சாயம் பூசி சடலத்தை வைத்துக் கொண்டு ஊர்வலம் என்ற பெயரில் இஸ்லாமியர்களின் கடைகளை அடித்து நொறுக்கினார்கள். மொபைல் போன் கடைகளை உடைத்து உள்ளே புகுந்து மொபைல் போன்களை  திருடிக் கொண்டு ஓடினார்கள். ஆஜ்மீர் பிரியாணி கடை என்ற கடையில் அப்படியே அண்டாவோடு பிரியாணியை கொள்ளையடித்துத் தின்றார்கள்.

 அண்டா பிரியாணி திருட்டுக் கட்சி என்ற பெயரும் பாரதீய ஜனதா கட்சிக்கு வர இந்த சம்பவம்தான் காரணம்.

 சங்கிகள் அடிப்படையாக மோசமானவர்கள். எல்லாவற்றிலும் மோசடி செய்பவர்கள். அதனால் அவர்களோடு வர்த்தக உறவோ, ஏன் குடும்ப உறவோ உள்ளவர்கள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அந்த மோசமான குணாம்சத்தின் விளைவாக, சங்கிகளின் துரோகத்தின் எதிர்வினையாக சில நேரம் கொலைகள் கூட நிகழ்கிறது.

 ஆனால் தனிப்பட்ட காரணங்களுக்காக நிகழும் கொலைகளுக்குக் கூட மதச்சாயம் பூசி மதக் கலவரத்தைத் தூண்டுவது என்பதும் சங்கிகளின் குணாம்சம். இதிலே மிகப் பெரிய கேடி எச்.ராசா. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தலையீட்டால் ராசா தூண்டியும் ராமநாதபுரத்தில் கலவரம் தடுக்கப்பட்டது என்பது இந்த மாத உதாரணம். ஆனால் எடுபிடி அரசு அந்த எஸ்.பியை பந்தாடி விட்டது.

பாஜகவின், சங்கிகளின் கலவர வரலாற்றை நினைவு கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. “அண்டா பிரியாணி திருட்டு தினம்” நினைவு படுத்துவது இதைத்தான்.

 திருடிச் சென்ற அண்டா இன்னும் திரும்பி வராததால்

#அண்டாவை_திருப்பிக்கொடுங்கடா

என்று சொல்ல வேண்டியுள்ளது.

No comments:

Post a Comment