Friday, September 4, 2020

எச்.ராசாவின் பிண அரசியல்.

 


சமூக விரோதிகள் நிரம்பிய கட்சி பாஜக. இப்போது புதிதாக, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பாலியல் வன் கொடுமை போன்ற பல வழக்குகள் கொண்ட கிரிமினல் குற்றவாளிகளை தேடி தேடி கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

 எந்த ஒரு சமூக விரோதிக்கும் நிச்சயம் எதிரிகள் இருப்பார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் என்பது போன்ற எதிர்வினைகள் அந்த சமூக விரோதிகளுக்கு நேர்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.

 குடும்பத் தகராறு,

தவறான உறவுமுறைகள்,

பண மோசடி

 போல பல காரணங்களால் அப்படி பாஜகவில் உள்ள கிரிமினல் வழக்கு சங்கிகள் (கிரிமினல் சங்கி என்று நான் சொல்லாததற்கு காரணம் உண்டு. சங்கி என்றாலே கிரிமினல்தானே! அதை வேறு ஏன் தனியாக சொல்ல வேண்டும்!) கொல்லப்படுகிற போது அதற்கு மதச்சாயம் பூசுவதே எச்.ராசா உள்ளிட்ட பேர்வழிகளின் வேலை.

 அப்படித்தான் ராமநாதபுரத்திலும் பிரச்சினையை தூண்டி விடப் பார்த்தார்.

 ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கொலையின் பின்னணியில் மதப் பிரச்சினை கிடையாது என்று தெளிவாக சொல்லி விட்டனர்.

 நீட் காரணமாக அனிதா இறந்த போது பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது “பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக சங்கிகள் வசை பாடினர்.

 ஆனால் உண்மையிலேயே  பிண  அரசியல் செய்வது பாஜகவும் எச்.ராசா போன்றவர்களும்தான்.

No comments:

Post a Comment