Friday, September 18, 2020

நீங்கள் ஓசியில்தான் எழுதுகிறீரா மாலன்?

 


தேர்வுகள் குறித்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உருவாக்க விழிப்புணர்வு படங்கள் உருவாக்க வேண்டும் என்றும் அந்த படத்தில் சூர்யா பணம் வாங்காமல் நடித்துத் தரலாமே என்று மூமூமூமூத்த பத்திரிக்கையாளர் மாலன் ஆஆஆஆஆஆலோசனை கூறியுள்ளார். இது ஒன்றும் மாணவர்கள் மீதான அக்கறை கிடையாது. சூர்யா மீதான எரிச்சல்.

 சூர்யாவை ஓசியில் நடித்துத் தரச் சொல்லி ஆலோசனை கூறியுள்ள மாலன் அவர்களே, நீங்கள் ஓசியாகத்தான் மோடிக்கு ஆதரவாக எழுதுகிறீர்களா?

 நீங்கள் பணத்திற்காக எழுதும் வார்த்தை வியாபாரி என்பது எல்லோருக்கும் தெரியும். இப்போது பாஜகவிலிருந்து உங்களுக்கு கிடைக்கும் பணத்தைப் போல இரட்டிப்பாக  திமுக தருவதாக சொன்னால் “தளபதி ஸ்டாலின் வாழ்க” என்றும் எழுதுவீர்கள்.

 துட்டுக்கு எழுத்தை விற்கும் வணிகரெல்லாம் வாய் திறந்து அடுத்தவர்களைப் பற்றியெல்லாம் பேசவே கூடாது.    

 அப்புறம் இந்த டைம்ஸ் ஆப் இந்தியா அவிழ்த்து விட்டுள்ள கட்டுக்கதைக்கு எவ்வளவு ரூபாய் கொடுத்தார்கள்? அதை சிலாகித்து எழுதிய உங்களுக்கு எவ்வளவு ரூபாய்? இப்போ எல்லாம் நிறைய எழுதறீங்க, நிறைய துட்டுதான் போல. . .  

 

 

No comments:

Post a Comment