Tuesday, September 29, 2020

அயோத்தியில பாபர் மசூதி இருந்ததா?

 


பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்றச் செயலுக்கான வழக்கில் இன்று தீர்ப்பு வரப் போகிறது.

தீர்ப்பு வரும். ஆனால் நீதி வருமா?

பாபர் மசூதி இடத்தை கோயில் கட்ட தாரை வார்த்துக் கொடுத்த தீர்ப்பில் மசூதியை இடித்தது குற்றச் செயல். கிரிமினல் நடவடிக்கை என்று சொல்லப் பட்டுள்ளது. ஆனால் அந்த குற்றச் செயல் செய்தவர்களிடமே இடத்தை ஒப்படைத்தது நீதிமன்றம்.

இன்றுள்ள சூழலில் அத்வானிக்கு எதிராக தண்டனை வரும் என்ற எதிர்பார்ப்பு சிறிதும் இல்லை. 

"அயோத்தியில் பாபர் மசூதி இருந்ததா என்ன?"

என்று கேட்காமலும்

"பாபர் மசூதி இடிப்பு சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் கிராஃபிக் வேலை" 

என்று சொல்லாமலும் 

இருந்தாலே அதுவே பெரிய விஷயம்.

சேகர் ரெட்டி போன்ற சின்ன லெவல் களவாணிகளே தப்பிக்கையில் அத்வானி மட்டும் மாட்டிக் கொள்வாரா என்ன!


No comments:

Post a Comment