Wednesday, September 23, 2020

யார் அந்த அப்ரசண்டி டாக்டர்?

 


என்னய்யா கட்டு போட்டிருக்காரு அந்த டாக்டர்? கட்டை மீறி ரத்தம் வெளியில வருது? கட்டு போட்ட கையில ஒத்தரு காகிதத்தை வச்சுக்கிட்டு ஏதோ எழுதறாரு? கட்டு போட்ட கையில இப்படியெல்லாம் செய்யக் கூடாதுன்னு பேஷண்டுகிட்ட சொல்ல மாட்டாரா?  பாவம் அந்த அம்மா! கையிலயும் கட்டு, தலையிலயும் கட்டு. ஆனாலும் இன்னொரு போட்டோவில சந்தோஷமா சிரிக்கறாங்க! மேக்கப் கலையவே இல்லை. இன்னொருத்தருக்கு வலியே தெரியலையா இல்லை துன்பம் வரும் வேளையில சிரிங்கன்னு திருவள்ளுவர் சொன்னதால சிரிக்கிறார் போல!

 


இந்த டாக்டர் ஒழுங்கா கட்டு போட்டிருந்தா, அது ரத்தம் இல்லை, சும்மா சாயம், டொரினாவோ குடிச்சிட்டு சும்மா மேல சிந்தியிருக்காங்கன்னு பாஜக கலைத்துறை ஆளுங்களைப் போய் மத்தவங்க வாய் மேல பல்லைப் போட்டு பேசுவாங்களா?

 கோச்சிங் செண்டரில காசு கொடுத்து  நீட் பாஸ் பண்ண டாக்டர் போல இருக்கு. அவரு அப்ரசண்டித்தனமாக ரத்தம் வர அளவுக்கு கட்டு போட்டதால் இப்படி எல்லாரும் நக்கலடிக்கறாங்க.

 சிங்காரவேலன் படத்துல வெண்ணிற ஆடை மூர்த்தி கமலஹாசனுக்கு எவ்வளவு ஸ்ட்ராங்கா கட்டு போடுவார். அதைப் பார்த்து கத்துக்கய்யா!

 பிகு: இந்த பதிவை எழுதி விட்டு புகைப்படத்தை முக நூலில் இருந்து எடுக்கும் போதுதான் கீழே உள்ள போட்டோவை பார்த்தேன்.

 


எவ்வளவு நேக்கா நம்ம புளிச்ச மாவு ஆஜானை கோர்த்து விட்டுருக்காங்க பாருங்க!

 

No comments:

Post a Comment