Saturday, September 5, 2020

மயிலுதான் காரணமாம் !

 


இந்தியா இன்று சந்தித்துள்ள பொருளாதார பின்னடைவிற்கு கடவுளின் செயல்தான் காரணம் என்று சொன்னதற்காக அனைவரும் நிர்மலா அம்மையாரை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஆனால் அப்படி சொன்னதற்கு அவர் காரணம் இல்லையாம்.

 என்ன காரணம் சொல்லலாம் என்று அவரும் மோடியும் கிளி ஜோசியத்திற்குப் பதிலாக மோடியின் சமீபத்திய செல்லப் பிராணியான மயில் மூலம் ஜோசியம் பார்த்துள்ளார்கள்.

 கடவுள் ,

கொரோணா தொற்று,

நேருவே காரணம்,

முகலாயர்களே காரணம்,

 என்று நான்கு சீட்டை போட்டிருக்கிறார்கள்.

 இதிலே மிகவும் ஜாக்கிரதையாக செல்லா நோட்டு, அவசரகதியில் ஜி.எஸ்.டி அமலாக்கம் போன்ற  சீட்டுக்களை மயிலிடம் காண்பிக்காமல் இருந்துள்ளார்கள்.

 கடவுள்  என்ற சீட்டை மயில் எடுத்துக் கொடுக்க, அதைத்தான் நிர்மலா அம்மையார் சொல்லியிருக்கிறார்.

 உண்மை இவ்வாறு இருக்க மயிலுக்குப் பதிலாக நிர்மலா அம்மையாரை திட்டலமா?

 நியாயமா இது?

 என்ன புரியலையா?

 கீழே உள்ள கார்ட்டூனுக்கான விளக்கம்தான் மேலே உள்ளது.



No comments:

Post a Comment