Monday, September 28, 2020

ஆஜான் ரோலில் சாரு . . .

 


வழக்கமாக கலை, இலக்கியத்துறையைச் சேர்ந்த எந்த ஒரு ஆளுமை காலமானாலும் அவரை எப்படி புளிச்ச மாவு அசிங்கப்படுத்தப் போகிறதோ அல்லது அவரை முன் வைத்து எத்தனை பேரை இழிவுபடுத்தப் போகிறதோ என்ற அச்சமும் கலக்கமும் வரும்.

நல்ல வேளையாக எஸ்.பி.பி க்கு அவரது படத்தைப் போட்டு அஞ்சலி என்று ஒற்றை வார்த்தையோடு முடித்துக் கொண்டு விட்டார். பிறகு ஒரு இரண்டு நாள் கழித்து எஸ்.பி.பி பாடிய முதல் மலையாளப் பாட்டின் வரிகளையும் தமிழ் அர்த்தத்தையும் போட்டு அமைதியாக இருந்து விட்டார்.

திரைத்துறையோடு வில்லங்கம் செய்ய ஆஜான் விரும்ப மாட்டார் என்பது வைரமுத்து சர்ச்சையில் அடித்த பல்டியிலேயே புரிந்தது. 

என்ன இருந்தாலும் துட்டு முக்கியமல்லவா! ஐந்து நட்சத்திர விடுதி வசதி இன்னும் முக்கியமல்லவா! அதனால் ஆஜான் உஷாராக இருந்து விட்டார். 

ஆனால் அந்த ரோலை சாநி எனப்படும் சாரு நிவேதிதா எடுத்துக் கொண்டு விட்டார். 

ஜெமோவால் பேச முடியாத சந்தர்ப்பங்களில் அவர் குரலாக சாநி இருந்திருக்கிறார். 

எஸ்.பி.பி இறந்து போனதற்கு எழுத்தாளர்கள் ஏனய்யா உருகி உருகி எழுதுகிறீர்கள்? என்பதுதான் அவரது பிரச்சினையாம். 

சாநியின் பொறுமல் கீழே உள்ளது.


என் குழப்பம் சந்தேகம் எல்லாம் என்னவென்றால், ஒரு பக்கம் புதுமைப்பித்தன் பாரதி என்று உச்சத்தில் நிற்கிறீர்கள்.  இன்னொரு பக்கம் சினிமா பாட்டு என்ற மட்டரகப் பொழுதுபோக்கில் கிடக்கிறீர்கள்.  கிடங்கள்.  ஆட்சேபணையே இல்லை.  நானும் அவ்வப்போது கிடப்பேன்.  ஆனால் இதுவே சுவாசம் என்கிறீர்கள்.  என் உயிரே போய் விட்டது என்கிறீர்கள்.  என் வாழ்க்கையே போய் விட்டது என்கிறீர்கள்.  என் ஆன்மாவே கரைந்து விட்டது என்கிறீர்கள்.

எழவு வீட்டில் ஏகடியம் பேசக் கூடாது என்ற அடிப்படை நாகரீகம் தெரியாதவன் அல்ல நான்.  ஆனால் ஒரு பாடகரின் மறைவை  உங்கள் சொந்த துக்கமாக மாற்றுவது எது?  சொல்லுங்கள்.  நானும் உங்கள் துக்கத்தோடு சேர்ந்து கொள்கிறேன்.  பாமரர்களைப் போலவே காமன்மேன்களைப் போலவே உங்களுக்கும் சினிமாதான் உயிர்மூச்சு.  சினிமாதான் உங்கள் மதம்.  கலை உன்னதம் என்று சொல்வதெல்லாம் வெறும் பகட்டு.  உங்களையும் பாமரரையும் பிரிப்பது கலை ரசனை அல்ல. 

தி. ஜானகிராமனோ, எம்.வி. வெங்கட்ராமோ, க.நா.சு.வோ, ஆதவனோ, ந. பிச்சமூர்த்தியோ, கு.ப. ராஜகோபாலனோ, சுந்தர ராமசாமியோ, புதுமைப்பித்தனோ யாருமே இப்படி வெகுஜன ரசனை சார்ந்த, பாமர ரசனை சார்ந்த பிரமுகர்கள் காலமாகும்போது இப்படி “என் உயிர் போச்சே” என அழுததில்லையே?  ஆனானப்பட்ட காந்திக்கே அவர்கள் ஒரு வார்த்தை சொல்லவில்லையே?  காரணம், அப்போது தி. ஜானகிராமனின் ரசனை அரியக்குடி ராமானுஜ அய்யங்காராக  இருந்தது.  சினிமாவின் டம்குடப்பாவாக இல்லை.  

நான் புகார் சொல்லியிருப்பது எழுத்தாளர்களை.  ஒரு சினிமா பாடகர் இறந்து போனால் அதற்கு இலக்கியவாதி கவிதை எழுதுகிறார்.  சிற்பி சிற்பம் உருவாக்குகிறார்.  ஓவியர் ஓவியம் திட்டுகிறார்.  அப்படியானால் நீங்கள் ஏன் ஐயா பாப்லோ நெரூதா, பாரதி என்றெல்லாம் சொல்கிறீர்கள்?  பட்டுக்கோட்டை பிரபாகர் வழியில் எழுத வேண்டியதுதானே?  `கலையில் மேன்மையானது என்று இல்லையா?  எப்போதும் சினிமா பாட்டுதானா? 

என் புகார் அத்தனையும் எழுத்தில் உன்னதத்தைத் தேடி இசையில் டம்குடப்பாவோடு உட்கார்ந்து கொண்டிருக்கும் பரிதாபமான எழுத்தாளர்கள் மீதுதான்.

ஒற்றை வாசகத்தில் சொல்ல வேண்டுமென்றால்

ஏராளமான மக்கள் நேசிக்கும் ஒரு கலைஞன் மீதான பொறாமையில் சர்ச்சையை உருவாக்கி ஒளி வட்டத்தை தன் மீது பாய்ச்ச முயலும் மட்டமான தந்திரம். 

ஆமாம். காமன் மேனை நீங்கள் என்ன ஒசத்தி? ரெண்டு கொம்பு முளைத்திருக்கிறதா அல்லது குறைந்த பட்சம் வாலாவது இருக்கிறதா?

சென்னை புத்தக விழாவிலேயே இவரை யாரும் சீண்டவில்லை என்பதற்கு நேரடி சாட்சியம் நான். 

இந்த படித்தால் அந்த சம்பவம்  என்னவென்று உங்களுக்கு தெரியும்.

இந்த மாதிரியே எழுதிக் கொண்டிருந்தால் மேலே சொன்ன சம்பவம் நடந்ததற்கு இரண்டு  வருடங்கள் முன்பு சென்னை புத்தக விழாவில் நடந்ததாக இவர் கதை விட்ட சம்பவத்தை  காமன் மேன்கள் யாராவது செய்தாலும் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.




No comments:

Post a Comment