Wednesday, September 16, 2020

பிரமிக்க வைத்த பிரம்மாண்டம்

 

எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது என்ற செய்தியை தாங்கிய பதாகைகளை குடும்ப உறுப்பினர்களோடு  பிடித்த படி புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வது என்ற எங்கள் சங்க முடிவு அமலாக்கப்பட்டது குறித்து 08.09.2020 அன்று  குடும்பத்தோடு குரல் . . . என்ற பதிவில் பகிர்ந்து கொண்டிருந்தேன். கிளை வாரியாக புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டது.

அனைத்து படங்களையும் ஒரே ஃப்ரேமில் கொண்டு வர முயற்சித்தேன். Picassa என்ற மென் பொருள் மூலம் அனைத்து புகைப்படங்களையும் Collage செய்து பார்த்தேன்.

அதன் பிரம்மாண்டத்தில் பிரமித்துப் போனேன்.




 சங்கத்தின் அறைகூவலை குடும்பத்திற்குள் கொண்டு சென்ற தோழர்களை எண்ணி பெருமிதமாகவும் நெகிழ்ச்சியாகவும் உள்ளது.

மேலே உள்ள படத்தில் 

எந்த ஒரு தோழரின் முகமும் தெரியாது.

ஆனால் எங்களின் ஒற்றுமை தெரியும். போராட்ட உணர்வு தெரியும். எல்.ஐ.சி நிறுவனத்தின் மீதான நேசம் தெரியும். அதன் பங்குகளை விற்க அனுமதியோம் என்ற உறுதி தெரியும்.

WE SAY NO TO LIC IPO

1 comment: