Tuesday, November 3, 2020

ஆடு மேய்க்கவே போயிடுங்க அண்ணாமலை

 


இரண்டும் ஒன்றில்லைதான் அண்ணாமலை

 ஆட்டுக்கார அண்ணாமலை, ஐ.பி.எஸ் உதிர்த்த முத்து இது.

 


அண்ணாமலை சொல்வதை ஒப்புக் கொள்கிறேன்.

 சுப்பையா சம்பவமும் தோழர் தொல்.திருமா அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளும் ஒன்றல்ல. இரண்டையும் தனித்தனியாகத் தான் பார்க்க வேண்டும்.

 அண்ணாமலையின் பார்வையில்தான் எது சரி எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் பக்குவம் இல்லாத கோளாறு இருக்கிறது.

 சுப்பையா செய்தது பக்கா அயோக்கியத்தனம். சமரசம் ஏற்பட்டு விட்டதால் அந்த அசிங்கம் மறைந்து விடாது. மருத்துவராக அல்ல, மனிதராக இருப்பதற்கே அருகதையற்றவன் அவன். அவனுக்கு புதிதாக பதவி கொடுப்பது என்பது அவன் செய்த ஆபாசத்திற்கு அங்கீகாரம் அளிப்பது போலதான். பாஜகவின் பாசிஸ குணாம்சத்திற்கு அஞ்சி இழிவு செய்யப்பட்ட அந்த பெண்மணி சமரசத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கலாம். அதனால் சுப்பையா உத்தமனாகி விட மாட்டான். அவனுக்கு பதவி கொடுத்தது என்பது கண்டிப்பாக பெண்களை இழிவு படுத்தும் செயல்தான். மோடி அரசின் எண்ணற்ற அயோக்கியத்தனங்களில் இதுவும் ஒன்றுதான்.

 அதே நேரம் திருமா மீது நீங்கள் ஏன் பல வழக்குகளை பதிவு செய்துள்ளீர்கள்? பெண்களை நிஜமாகவே இழிவு படுத்தியது அவரா அல்லது மனுஸ்மிருதியா?

 மனுஸ்மிருதி எப்படியெல்லாம் பெண்களை இழிவு படுத்தியுள்ளது என்று அம்பலப்படுத்தி அவர் பேசியதை மூடி மறைத்து, திசை திருப்பி அவர் மீது அவதூறை அள்ளி  வீசுவது அயோக்கியத்தனமில்லையா?

 மனுஸ்மிருதி என்று பல இருக்கிறது, மனுஸ்மிருதி ஒரு மாயை, மனுஸ்மிருதி காலாவதியானது, மனுஸ்மிருதியை ஆங்கிலேயர்கள் தவறாக மொழி பெயர்த்து விட்டார்கள் என்று இப்போது பல சங்கிகள் பல கதைகளை இப்போது கூறத் தொடங்கியுள்ளது எதற்காக?

 மனுஸ்மிருதிதான் பெண்களை உண்மையிலேயே இழிவு படுத்துகிறது என்ற செய்தி மக்களை விரிவாக சென்றடைந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் மனுஸ்மிருதிக்கு புதிது புதிதாக இவ்வளவு வியாக்யானங்கள்!

 மனுஸ்மிருதி காலாவதியாகி விட்டதா? இப்போது நடைமுறையில் இல்லையா?

 வேலைக்கு போகும் பெண்களில் 90 % பேர் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று ஜெயேந்திர சரஸ்வதி சொன்னதும், ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் உயரதிகாரிகளோடு படுக்கையை பகிர்ந்து கொண்டுதான் பணியும் பதவி உயர்வும் பெறுகிறார்கள் என்று சிப்பு சேகர் சொன்னதும் 30 % பெண்களிடம் மட்டுமே பெண்மை உள்ளது என்று விஷ மூர்த்தி சொன்னதும் அடுத்த வீட்டுப் பெண்ணின் வாசலில் சுப்பையா சிறு நீர் கழித்தது ஆகியவை எல்லாம் மனுஸ்மிருதி காட்டிய பாதைதானே!

 அது மட்டுமல்ல

 பிறப்பில் பேதம் பார்க்கச் சொல்லிக் கற்றுத் தந்துள்ள மனுஸ்மிருதியின் வழியில்தானே நீங்கள் திருமா மீது வழக்கு தொடுப்பதற்கு முக்கிய காரணம்! இதிலே ஜாதி வெறி கிடையாதா உங்களுக்கு?

 உங்கள் கட்சிக் காரர்கள் போட்டிருந்த சாயக் கட்டைக் கூட கண்டுபிடிக்க இயலாதவராக “அவர்களுக்காக அழுக வேண்டாம், கேலி செய்யாதீர்கள்” என்று சொல்லி போலீஸ் வேலைக்கு லாயக்கில்லாதவர் என்று நிரூபித்தீர்கள்.

 ஒழுங்காக முட்டு கொடுக்கக் கூட துப்பில்லாதவர் என்ற பெயரை சுப்பையா செய்தது ஆபாசம் என்று சேம் ஸைட் கோல் அடித்து அரசியலுக்கும் லாயக்கில்லாதவர் என்று நிரூபித்து விட்டீர்கள்.

 எனவே  மீண்டும் ஆடு மேய்க்கவே போய் விடுங்கள் அண்ணாமலை.

 ஆடு மேய்ப்பதிலாவது  ஜாக்கிரதையாக இருங்கள் அண்ணாமலை.

 மோடி திடீரென சட்டம் போட்டு இந்தியாவில் உள்ள ஆடுகள் அனைத்தும் அதானிக்கும் அம்பானிக்கும்தான் சொந்தம் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.

 

No comments:

Post a Comment