Sunday, November 1, 2020

கலவரத்திற்கு உசுப்பேத்தும் கண்ணியவான்

 


சில நாட்கள் முன்பே “ உண்மையைச் சொன்னால் சங்கிகளுக்கு????” என்ற பதிவில் அதி மேதாவியான, அனுபவஸ்தரான, முதியவரான, மன நல ஆலோசகரான ஒருவரைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.

 நான் சங்கியல்ல என்று சொன்ன அவரது பின்னூட்டத்தை முதலில் பாருங்கள்.

 


அதன் பின்பு அவர் தொடர்ச்சியாக போட்டுள்ள பல்வேறு பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்டுக்களை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

















அப்பட்டமான சங்கி மொழியில் மிரட்டுவது மட்டுமல்லாமல் தலையை வெட்டி எடுத்த காளியின் படத்தையும் இரண்யனின் வயிற்றைக் கிழிக்கும் நரசிம்ம அவதாரத்தின் படத்தையும் வேறு பகிர்ந்து கொண்டு அடிஷனல் மிரட்டல் செய்கிறார். 




முகப்புப் படத்தில் உள்ள திரிசூலத்தை யார் மீது பாய்ச்சப் போகிறாரோ? திரிசூலத்தின் ஒரு முனை மூலம் இஸ்லாமியர்களையும் இரண்டாவது முனை மூலம் கிறிஸ்துவர்களையும் மூன்றாவது முனை மூலம் கம்யூனிஸ்டுகளையும் அழிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் வெளிப்படையாகவே பேசியதை நாம் மறந்து விட முடியுமா?

 அரசு அலுவலகங்களில் பணி புரிந்து கொண்டு அர்பன் நக்ஸல்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆஜான் அரைத்த அதே புளிச்ச மாவை இவரும் அரைத்துள்ளார்.

 பாவம் ஆடிக்கொரு பதிவு, அமாவாசைக்கு ஒரு பதிவு என்று போட்டுக் கொண்டிருந்த ஒரு மனிதர் ஒரே ஒரு கடுமையான எதிர்வினையை தாங்க முடியாமல் முழுசாக  சந்திரமுகியாக மாறி  கலவரத்திற்கு வித்திட்டுக் கொண்டிருக்கிறார்.

 மேலே உள்ளதை விட இன்னொரு ஸ்பெஷல் ஐடம் வேறு வைத்துள்ளார். அதை தனியாக பதிவு செய்கிறேன்.

 ஒரு தனிப்பட்ட நபருக்காக இப்படி ஒரு பதிவு அவசியமா என்று நீங்கள் நினைக்கலாம். வெளிப்படையான ரௌடிகளான எச்.ராசா வகையறாக்களை விட இது போன்ற பசுந்தோல் போர்த்திய குள்ள நரிகள் மிகுந்த ஆபத்தானவர்கள். இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறேன் என்ற பெயரில் அவர்களின் மனதில் நச்சினை ஊட்டுபவர்கள். முற்போக்கு சக்திகள் தொடர்ந்து கண்காணித்து  கவனம் செலுத்தி தலையில் தட்டி வைக்காவிட்டால் இன்னொரு கல்யாண்ராமனாக மாறும் வாய்ப்பு அதிகம்.

இவ்வளவு யோக்கியமாக எச்.ராசாவின் ஹை கோர்ட் போல பேசுகிற இந்த மனிதர் அடுத்த வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த சுப்பையா பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை என்கிற போதே இவர்களின் பெண்கள் மீதான அக்கறை பல்லிளித்து விடுகிறது. 

 

No comments:

Post a Comment