Saturday, November 21, 2020

முருக பக்தர்கள் ஏற்கிறார்களா?

 


இந்த பதிவில் ஒரு காணொளியை இணைக்க எனக்கு மிகவும் வ்ட்கமாகவும் அசிங்கமாகவும் இருந்தாலும் சங்கிகள் எவ்வளவு கேவலமானவர்கள் என்பதை உணர்த்த அவசியமாகிறது.

பாஜகவும் எடுபிடி அரசும் "வேல் யாத்திரை" என்ற பெயரில் தினம் தினம் வடிவேலுவுடன் முத்துக்காளை நடத்திய "செத்து செத்து விளையாட்டு" ஒன்றை நடத்துகிறது.

அந்த விளையாட்டில் மக்களை ஈர்க்க பாஜக கையாளும் ஒரு நடவடிக்கையின் காணொளி கீழே உள்ளது.



மற்ற கட்சிகள் இது போன்ற நிகழ்ச்சிகளை தங்கள் கூட்டங்கள் துவங்குவதற்கு முன்பு நடத்துவதில்லையா என்று சிலர் கேட்கலாம். 

பாஜக வேல் யாத்திரை என்பதை என்ன பெயர் சொல்லி நடத்துகிறது?

தோழர் தொல்.திருமா, மனு தர்மத்தில் பெண்கள் பற்றி சொன்னதை வெளியே சொன்னதால் இழந்து போன பெண்களின் பெருமையை மீட்க, முருகக் கடவுளின் ஆசியோடு நடத்தப்படுவதாக சொல்கிறது.

ஒவ்வொரு நாளும் முருகன் கோயிலில் இருந்துதான் நாடகத்தை துவக்குகிறது. முருகனின் ஆயுதமான வேல் பிரச்சார ஆயுதமாக மாறி இருக்கிறது.

முருக பக்தர்களே, முருகனின் பெயரில் நடைபெறும் ஒரு நிகழ்வில் இப்படி பெண்களை "குத்து டான்ஸ்" ஆட வைப்பது முருகனுக்கு இழிவில்லையா?

இவர்களின் "பக்தி வெறும் பகல் வேஷம்" என்று உங்களுக்கு புரியவில்லையா?

முருகனின் பெயரில் நடைபெறும் இந்த கீழ்த்தரமான நடவடிக்கையை நீங்கள் இன்னும் எத்தனை நாள் அனுமதிக்கப் போகிறீர்கள்?

பக்தி என்ற பெயரில் நீங்கள் அனுமதித்தால் "உங்கள் கடவுளே உங்களை மன்னிக்க மாட்டார்"

2 comments:

  1. ஏன் ஒரு முருக பக்தர் கூட எதிர்வினை ஆற்றவில்லை? பாஜக செய்வதை ஏற்றுக் கொள்கிறார்களா? அல்லது பாஜகவினரின் அநாகரீகம், அராஜகம் கண்டு அச்சமா?

    ReplyDelete
  2. அதெப்படி வாய் திறப்பாங்க. அவங்களுக்கு சேர்ந்து நின்னு பார்த்துருப்பாங்க

    ReplyDelete