Tuesday, November 3, 2020

கேரள சங்கி காங்கிரஸ்

 


கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் உதிர்த்த அபத்த முத்திற்கு தோழர் உ.வாசுகி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாஜகவுடன் கேரளாவில் காங்கிரஸ் கை கோர்த்துக் கொண்டதால் அங்கே உள்ள காங்கிரஸ்காரர்களும் சங்கிகள் பாணியில் பெண்களை இழிவு படுத்த தொடங்கி விட்டார்கள். ஏற்கனவே கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தோழர் ஷைலஜாவை "கொரோனா ராணி" என்று வசை பாடிய பேர்வழிதான் இந்த முல்லப்பள்ளி ராமச்சந்திரன்.

காங்கிரஸ் தலைமையால் இந்த கேரள காங்கிரஸாரை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது யதார்த்தம். ராகுல் காந்தியை இவர்கள் எச்.ராசாவின் ஹைகோர்ட் போலத்தான் மதிக்கிறார்கள்.

இந்த போக்கு தடுத்து நிறுத்தப்படாவிட்டால் ஒட்டு மொத்த கேரள காங்கிரஸும் பாஜகவில் ஐக்கியமாகி விடும். 

1 comment:

  1. You are often reminding that Kerala cong. will merge with bjp.if ideology is changed,no wonder in merging..

    ReplyDelete