Saturday, November 21, 2020

மார்க்சிஸ்ட் - திமுக - தமிழக அரசு

 


7.5 % உள் ஒதுக்கீட்டின் மூலமாக மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தும் பல அரசுப்பள்ளி மாணவர்களால் தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களை கட்ட இயலவில்லை.

அதனால் அவர்களின் செலவினத்தை அரசு ஏற்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்தது.



அப்படிப்பட்ட மாணவர்களின் செலவினங்களை தங்கள் கட்சி ஏற்கும் என்று திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.



சுதாரித்துக் கொண்ட எடப்பாடி அச்செலவினத்தை தமிழக அரசே ஏற்கும் என்று அறிவித்துள்ளார்.



ஏழை மாணவர்களின் பிரச்சினைகளை உணர்ந்து சரியான நேரத்தில் சரியான கோரிக்கையை முன்வைத்த மார்க்சிஸ்ட் கட்சிக்கும் அதன் தீவிரத்தை உணர்ந்து அதனை ஏற்றுக் கொண்ட திமுக தலைவருக்கும் பாராட்டுக்கள்.

எங்கே அவர்கள் அரசியல் ஆதாயம் அடைந்து விடுவார்களோ என்று அஞ்சி வேறு வழியில்லாமல் வழிக்கு வந்த தமிழக முதல்வருக்கும் சின்னதாக வாழ்த்துக்கள்.

1 comment:

  1. People must understand the importance of the left. Because they only know the pain of poor.

    ReplyDelete