Wednesday, November 25, 2020

வேலூர் பாலாற்றங்கரை நல்லாருக்கா?

 


கரு மேகங்கள் திரண்டு அழகாய் காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் படம், நேற்றிலிருந்து முக நூலில் சுற்றிக் கொண்டே இருக்கிறது.

கல்பாக்கத்தில்,

பழவேற்காட்டில்,

கடலூரில்

எடுக்கப்பட்டதாக சுற்றி வருவதால்

இது எங்க ஊருதான் என்று த்ஞ்சை, திருச்சி போன்ற ஊர்க்காரர்களும் சொல்வதால் 

நாங்கள் வேலூர்க்காரர்கள் மட்டும் சளைத்தவர்களா என்ன?

இது வேலூர் பாலாற்றங்கரை.

பிகு 1 : வேலூர் பீச் என்று சொல்ல மன சாட்சி இடம் கொடுக்கவில்லை.

பிகு2 : வேலூர் பாலாற்றில் தண்ணீர் உண்டா என்று கேட்பவர்களுக்கு

2017 ல் எடுத்த படங்கள்




2015 ல் எடுத்த படம்


பிகு 3: அந்த கடற்கரைப் படம் கல்பாக்கம்தான் என்று கடைசியில் பஞ்சாயத்தார் தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளதாம்.

1 comment: