Thursday, November 12, 2020

நம்பி ஏமாறாதீங்க ரஜினி

 


வணக்கம் ரஜினி சார்,

உங்க ரசிகக் கண்மணிகளில் யாரோ வேலூர் நகரில் ஒட்டியுள்ள சுவரொட்டி இது.

மொட்டைக் கடிதம் எழுதுபவர்கள் "உண்மை விளம்பி" என்று பெயர் கொடுப்பார்கள். அது போல சுவரொட்டி அடித்தவரும் "வேலூர் மாநகர பொதுமக்கள்" என்று எங்களையும் சேர்த்து அச்சடித்துள்ளார்.

"காமராஜர் போல நல்லாட்சி தருவீங்க" என்ற வாசகத்தைப் படிக்கும் போது "வரி கட்ட வழக்கு போடுகிற, பள்ளிக்கு வாடகை தராத, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராத" என்னைப் போய் காமராஜ் என்று சொல்கிறார்களே என்று நீங்களே பகபகவென்று சிரித்திருப்பீர்களே!

இந்த சுவரொட்டி அடிச்ச கோஷ்டி ஓட்டு போடலைன்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.

ஏதோ வேலூர் மாநகரே மக்களே உங்களுக்கு ஆதரவாக இருக்காங்க என்று இந்த போஸ்டரை நம்பியெல்லாம் வந்துடாதீங்க. 

நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்கன்னு விஷ மூர்த்தி ஏற்கனவே விஜய் பக்கம் போய் அவர் அப்பா எஸ்.ஏ.சி மூக்குடைய காரணமாயிட்டார்.

இவங்க சொல்றதையெல்லாம் நம்பி முடிவெடுக்கும் முன்னாடி "வின்னர்" படத்தோட துவக்க சீனை பாருங்க. "இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிட்டாங்களேடா" என்ற வடிவேலு வசனத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

TAMILNADU DON'T NEED YOU

TAKE CARE OF YOUR HEALTH

No comments:

Post a Comment