Friday, November 6, 2020

மண்டியிட்டு மன்னிப்பு கேள் திருப்பதி நாராயணா!

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இன்று News18 Tamil Nadu தொலைக்காட்சி விவாதத்தில் பாஜகவின் திரு.நாராயணன் Narayanan Thirupathy தாங்கள் கடந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதே இல்லை என்றார்
கடந்த 2017, ஜூன் மாதம் 22ந் தேதியன்று பாஜகவின் இராமநாதபுரம் நகர நிர்வாகி அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை கடுமையாக தாக்கப்பட்டனர். இது குறித்து எச்.ராஜா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அஸ்வின்குமார் மற்றும் அவரது தந்தை “முஸ்லீம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று கூறியிருந்ததையும் . இதேபோன்று நாராயணன் “தமிழக காவல்துறை தலிபான்கள் அதிகம் உள்ள இராமநாதபுரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். சிரமம் இருப்பின் இந்த மாவட்டத்தை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிட்டால் ஒரே மாதத்தில் பயங்கரவாதத்தை வேரோடு அறுக்கும்” என்று தனது பதிவிட்டிருந்த்தையும் சுட்டிக்காட்டினேன்..ஆனால் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் யாருமே இஸ்லாமியர்கள் இல்லை.பாஜகவின் நோக்கம் மதமோதலை உருவாக்கி அதில் பலனடைவதுதான் என்றேன்.

திரு நாராயணன் தான் அப்படிச் சொல்லவில்லை என மறுத்ததோடு அதை நிரூபித்துவிட்டால் நான்சொல்கிறபடி அவர் கேட்பதாகவும் இல்லையென்றால் அவர் சொல்கிறபடி நான் கேட்கவேண்டும் என்றும் சொன்னார். நான் ஏற்றுக்கொண்டேன்.

அவர் ட்விட்டரில் 24/6/2017 இல் பதிவிட்டிருந்ததாகச் சொன்னேன். ட்விட்டரில் அந்த செய்தி இல்லை. நல்வாய்ப்பாக 22/6/2017 தேதியிட்ட முகநூல் பதிவாக உள்ளது.



என்ன நாராயணா, தோழர் கனகராஜ் ஆதாரம் கொடுத்துட்டாரு! என்ன செய்யப் போற? பொய் சொல்வதும் அம்பலமானாலும் பல்டி அடிப்பதும்தானே உங்கள் பாரம்பரியம்!

பேசாமல் தோழர் கனகராஜ் காலில் மண்டியிட்டு விழுந்து மன்னிப்பு கேள். போனா போகுது காமெடி பீஸ் என்று உன்னை மன்னித்து போய்த்தொலை என்று விட்டு விடுவார்.

பிகு: இந்த பதிவை எழுதும் முன் இந்த தரமான சம்பவம் குறித்து நாராயணன் அறிக்கை ஏதாவது உண்டா என்று பார்க்கப் போனேன். மனுஷன் வாய் திறக்கவே இல்லையே! காமெடி பீஸ் பயந்து பம்மி விட்டது.

No comments:

Post a Comment