Friday, November 13, 2020

வார்த்தைகளாலும் வாட்டும் கார்ட்டூனிஸ்ட்

 



ஹிந்து ஆங்கில நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் திரு சுரேந்திரா முகநூலில் செய்திருந்த பதிவின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளேன்.

சில பக்தாள், பீகார் தொடர்பான என்னுடைய கார்ட்டூன்கள் முழுமையாக பொய்த்துப் போய் விட்டதாகவும் நான் துறவறம் பேண வேண்டும் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. 

அன்பான பக்தர்களே, உங்களுக்கு பட்டாணி அளவிற்காவது மூளை இருந்தால் என்னுடைய கார்ட்டூன்கள்  அனைத்தும் எவ்வாறு கச்சிதமாக பொருந்தியது என்பதை புரிந்து கொண்டு வியப்பீர்கள்.

 1)     மோடியின் ஆசீர்வாதம் நிதீஷிற்கு பலித்தது என்றா நினைக்கிறீர்கள்? அவர் கட்சியின் எண்ணிக்கை மிகவும் மோசமாகக் குறைந்தது. மக்களின் மதிப்பை இழந்த அவர் மீண்டும் முதல்வராகப் போகிறார். பாஜக அவரை எடுபிடியாக பயன்படுத்தப்போகிறது. இதனை ஒப்புக் கொள்ளாமல் அவர் பாஜகவை அரசமைக்க விட்டிருக்க வேண்டும்.  பாஜக அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சியை விழுங்கி விடும் என்று அவர் அஞ்சியிருக்கலாம்.

 2)      பாஜக அரசின் ஒரு அங்கமாக இருந்தாலும் அரசு மீதான எதிர்ப்பு முழுதையும் நிதீஷே சந்திக்க வேண்டியிருந்தது.

 3)     பாஜக கூட்டணியின் வாக்குகளை பிரிக்கும் வேலையை சிராக் பஸ்வான் கச்சிதமாக செய்தார்.

 4)     தன்னுடைய கடினமான உழைப்பின் மூலமாக தேஜஸ்வி உங்களை நடுங்க வைக்க வில்லையா, கோலியாத்துக்களா?

 கார்ட்டூன்கள் போலவே பதிவும் செம ஷார்ப்

No comments:

Post a Comment