Wednesday, November 25, 2020

ஸ்டிக்கர் ஒட்டிங்க புத்தி இதுதான்

 


அதிமுக, பாஜக, அமமுக என மூன்றிலும் இருக்கிற வினோதமான சங்கி கிஷோர்.கே.சுவாமி என்ற அநாகரீகமான பிற்வியின் முகநூல் பதிவு இது.



2015 ல் இஸ்லாமிய அமைப்புக்கள் மேற்கொண்ட நிவாரணப்பணியும் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்த நற்பெயரும் சங்கிகளுக்கு அப்போது மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. அந்த எரிச்சல் இன்னும் தொடர்கிறது போல...

இப்போது கூட அவர்களுக்கு பெயர் வந்து விடும் என்ற கவலைதான் இருக்கிறதே தவிர, அரசோ, பாஜகவோ, அதிமுகவோ, அமமுகவோ களத்தில் நின்று மக்களுக்கு உதவுவார்கள் என்று சொல்ல வார்த்தை கூட வரவில்லை பாருங்கள்!

அதெப்படி சொல்வார்கள்?

2015 பெரு வெள்ளத்தின் போது அடுத்தவர் பொருளை வழிப்பறி செய்து  A1 படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டி வினியோகித்தார்கள்.

கஜா புயலின் போது மோடி பேனர் போட்ட  காலி லாரியை ரோட்டில் ஓட விட்டு நிவாரணம் செய்தது போல சீன் போட்டவர்கள் பாஜகவினர்.

அவர்கள் என்றைக்கு மக்களுக்கு உதவியுள்ளனர்? இப்போது மட்டும் உதவுவார்களா என்ன?


1 comment:

  1. Islamic brothers even cleaned Hindu temples after the flood is over in 2015. It is published in papers also.Heart and magnanimity is required to appreciate.

    ReplyDelete