Sunday, October 24, 2021

அண்ணாமலையை திட்டுவது ஏன்?

 


இன்னொரு மோடி வேண்டாமென்பதால்தான்…...

 ஒரு தோழர் தொலைபேசியில் கேட்டார்.

 “அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு அந்தாளப் பற்றியெல்லாம் எழுதனுமா?

 அவருக்கு சொன்ன பதில்தான் இங்கேயும்.

 “அண்ணாமலை எல்லாம் ஒரு ஆளே கிடையாது என்பது உண்மைதான். ஆனால் அண்ணாமலையை ஒரு மிகப் பெரிய ஆளுமை போல, மக்கள் சேவைக்காக ஐ.பி.எஸ் பதவியை ராஜினாமா செய்த தியாகியாக கட்டமைக்க சங்கிகள் முயல்கிறார்கள். அப்படியெல்லாம் பெரிய ஆள் கிடையாது. எல்லா முட்டாள் சங்கிகளைப் போன்ற ஒருவர்தான் என்ற உண்மையை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியுள்ளது.

 ஏனென்றால் இப்படித்தான் மூடரும் முரடருமான மோசமான நபர் ஒருவரை நல்லவர், வல்லவர், திறமைசாலி, அறிவாளி என்றெல்லாம் கட்டமைத்து இந்திய மக்களை ஏமாற்றியதன் விளைவை ஏழு வருடங்களாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

 இந்தியர்கள் மோடியால் ஏமாந்தது போல தமிழர்கள் அண்ணாமலையிடம் ஏமாறக்கூடாது”


No comments:

Post a Comment