Sunday, October 3, 2021

பிரெட் கொழுக்கட்டை

 


இன்று செய்த புதிய முயற்சி.

தேங்காய் துறுவலை வெல்லப்பாகில் போட்டு பூரணம் தயார் செய்து கொண்டேன். 

பிரெட் ஸ்லைஸ் ஒன்றொன்றாக எடுத்து சப்பாத்திக் கல்லில் நன்றாக அழுத்தமாக தேய்த்து ஒரு மூடியை வைத்து அழுத்தி வட்ட வடிவில் கத்தியால் வெட்டி எடுத்துக் கொண்டேன்.

அதற்குள்ளாக பூரணத்தை வைத்து இட்லி தட்டில் வேக வைத்து எடுத்தால் பிரெட் கொழுக்கட்டை தயார்.

அதே போல் இடியாப்ப மாவு வாங்குகையில் கொடுத்த கொழுக்கட்டை அச்சில் வைத்தும் சில கொழுக்கட்டைகளை தயார் செய்தேன். அதில்தான் பிரெட்டை மீறி பூரணம் வெளியே வரவில்லை. 







அரிசி மாவில் செய்தது போன்ற அதே ருசிதான். அந்த நேரத்தை விட சற்று குறைவு. 




No comments:

Post a Comment