Saturday, October 23, 2021

முதல்வர் வாழ்த்தினால் மட்டும்?

 


மற்ற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்  ஏன் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்ற கதறல் மத்யமர் குழுவில் அதிகமாகவே கேட்கிறது.

 “”மத்த மதப் பண்டிகைககளுக்கு வாழ்த்து சொல்லாதீங்கன்னு சொல்ல மாட்டோம், எங்களுக்கும் சொல்லுங்கன்னுதான் கேட்கிறோம்” என்று தசாவதாரம் கமலஹாசன் போல கேட்பவர்களும் உண்டு.

 இவர்கள் வாழ்த்துக்களை விரும்பும் பண்டிகைகளில்  பலதும்  லாஜிக் இல்லாதவை, ஒடுக்குமுறையை கொண்டாடுபவை, ஜாதியச் சாயமுடையது போன்ற விவாதங்களுக்குள் நுழைய நான் விரும்பவில்லை.

கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லி உள்ளார். ஸ்டாலினும் நிச்சயம் சொல்வார்.  இவர்களும் கொண்டாடும் பண்டிகைதானே பொங்கல்! அந்த வாழ்த்து போதாதா?

 சரி, பாவம், ஏதோ ஆசைப்படுகிறார்களே என்று ஒரு மரியாதைக்காக வாழ்த்து சொன்னால் மட்டும் அதை அப்படியே ஏற்கும் பக்குவம் உண்டா அவர்களுக்கு?

 “எங்களுக்கு அடி பணிந்து விட்டார் சுடலை. (ஸ்டாலின் என்று சொல்ல முடியாத அளவிற்கு அவர்கள் பெரிய மனிதர்களாம்) அஞ்சி நடுங்கி விட்டார். இனிமேல் தமிழ்நாட்டில் தாமரைதான். “  என்று பில்ட் அப்பை தொடங்கி விடுவார்கள்.

 ஏதோ அண்ணாமலைக்கு பயந்து போய் கோயில்கள் சனி, ஞாயிறன்றும் திறக்கப்பட்டது போல வாய் கிழிய பேசிய ஜந்துக்கள்தானே இவர்கள்!

 அந்த வெற்றுப் பீற்றலைக் கேட்பதற்குப் பதில்,  வாழ்த்து சொல்லாமல் இருந்து சங்கிகளின் கதறலைக் கேட்பதே  மேல்.

 

No comments:

Post a Comment