Friday, October 8, 2021

அண்ணாமலைடா, உளறல் மோடி சிஷ்யன்டா?

 


அந்த கட்சியில் சேரும் போதே பாரதிராஜா கட்சி என்று சொன்ன மனிதன். மாண்புமிகு பாரதப் பிரதமர் மகாத்மா காந்தி என்று சொன்னவர் ஒரு முன்னூறு வருடத்தை மாற்றிச் சொன்னதில் அதிசயம் என்ன இருக்கிறது. என்ன இருந்தாலும் மோகன்லால் கரம்சந்த் காந்தி என்று சொன்ன மோடியின் சிஷ்யனல்லவா?

 நிஜமாகவே சத்ரபதி சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தாரா என்பதே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம் என்று சென்னையின் வரலாற்று பற்றி பல கட்டுரைகளும் ஆரம்ப கால வெள்ளைக்காரர்கள் பற்றி வலம் எனும் நாவலையும் எழுதிய எழுத்தாளர் வினாயக முருகன் சொல்லியுள்ளார்.

 அண்ணாமலை சொன்ன காலகட்டத்தில் ஒரு வேளை “ராமன் எத்தனை ராமனடி?” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கலாம். அந்த படத்தில் ஒரு காட்சியில் சத்ரபதி சிவாஜியாகவே வரும் நடிகர் திலகம் அக்காட்சிக்காக செய்து கொண்ட உடையலங்காரம், ஒப்பனையோடு காளிகாம்பாள் கோயில் போயிருக்கலாம். அது செவி வழிச் செய்தியாக ஆட்டுக்காரரின் காதிற்கும் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது..

 பிகு  1 : மாலன் பதுங்கிக் கொண்டதால் கண்டெண்ட் இல்லாமல் போய் விடுமே என்ற அச்சத்தை போக்கியவர் அண்ணாமலை. நாளை இன்னும் இரண்டு பதிவுகள் உள்ளன.

பிகு 2 : புளிச்ச மாவு ஆஜானைத்தான் உளறு வாயன் என்று தோழர் ஆதவன் தீட்சண்யா கூறுவார். அந்த பட்டத்தை அண்ணாமலைக்கும் கொடுக்கலாமே.

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. நீ எப்பவும் போல ஒளிஞ்சுதானே வந்து கிட்ட இருக்க. உன்னோட உருப்படாத பின்னூட்டத்தை டெலிட் செய்து உன்னை திட்டறதில ரொம்ப சந்தோஷம்டா நாயே! தைரியம் இருந்தா நேரில வா பார்ப்போம்.

      Delete
  2. கோவிலில் உள்ள ஒரு அறிவிப்பு பலகை சிவாஜி வழிபட்ட கோவில் என்று கூறுகிறது. அதைத்தான் அண்ணாமலை பேசி இருக்கிறார். அவர் சொன்ன காலம்தான் தவறு. மு.க.ஸ்டாலின் உளறலாம் அண்ணாமலை உளறக்கூடாதா?
    வெங்கட்ராமன்
    பொன்னேரி கிளை

    ReplyDelete
    Replies
    1. அண்ணாமலையின் உளறல் புதிதல்ல. மேலும் ஸ்டாலினை உளறுவாயன் போல சங்கிகள் கட்டமைத்ததன் எதிர்வினையே இன்று அண்ணாமலை தாக்கப்படுவதற்கான காரணம்.

      Delete