Wednesday, October 6, 2021

இதற்கென்ன சொல்லும் சுப்ரீம் கோர்ட்?

 


மொட்டைச் சாமியார் மாநிலத்தில் கொடூர நிகழ்வு நடந்ததும்

"விவசாயிகள் தலைவர்கள் வன்முறையை கட்டுப்படுத்த இயலாதவர்கள்" என்று கடுமையான விமர்சனத்தை உச்ச நீதிமன்றம் வைத்தது.

"தங்கள் வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததால் கார் தடுமாறி வ்ழுந்ததில்தான் இரண்டு விவசாயிகள் இறந்து போனார்கள்"

என்ற மந்திரியின் கட்டுக்கதையை நம்பி சொன்ன விமர்சனம் இது.

இப்போது உண்மை வெளியாகி விட்டது.

விவசாயிகளின் பேரணி மீது வாகனம் வேகமாக வந்து மோதியதன் விளைவே விவசாயிகளின் கொலை என்பதையும் கல்லெறிதல் சம்பவமே நிகழவில்லை என்பதையும் காணொளி அம்பலப்படுத்தி விட்டது.

அயோக்கிய மந்திரியின் பேச்சை நம்பிய உச்ச நீதிமன்றம் இப்போது என்ன சொல்லப் போகிறது?

அயோக்கிய மந்திரியை, மந்திரி மகனை கைது செய்ய உத்தரவிடுமா?

No comments:

Post a Comment