Monday, October 11, 2021

கொலைக்கு கைது எப்போது?

 


உ.பி யில் விவசாயிகளை காரேற்றிக் கொன்ற கயவன் ஆசிஷ் மிஸ்ரா ஞாயிறு அன்று கைது செய்யப்பட்டுள்ளான்.

முதல் தகவல் அறிக்கையில் கொலை, அஜாக்கிரதை காரணமாக விபத்தில் மரணம் ஏற்படுத்துதல், சதிச் செயல் ஆகிய பிரிவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொலை மற்றும் சதிச்செயல் ஆகிய பிரிவுகளும் அஜாக்கிரதை காரணமாக விபத்தில் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவும் முரண்பாடு உடையதாக உள்ளது. மந்திரி மகனைக் காப்பாற்ற மொட்டைச்சாமியார் போலீஸின் ஏற்பாடோ?

ஆனால் அந்த கயவனின் கைதுக்கு என்ன காரணத்தை உ.பி சொல்கிறது தெரியுமா?

விசாரணைக்கு உடனடியாக வராதது, ஒத்துழைக்காதது, சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்த்தது ஆகிய காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரு மேலதிகாரி தெரிவிக்கிறார்.

சரி,

கொலை வழக்கில் எப்போது அவனை கைது செய்வீர்கள்?

No comments:

Post a Comment