Monday, October 25, 2021

மருது சகோதரர்களும் மத வெறியனும்

 மன்னிப்பு கேட்பதில் கோழை சாவர்க்கரின் சாதனையை விஞ்சிய எச்.ராசாவின் முக நூல் பதிவொன்று மருது சகோதரர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு மதச்சாயம் பூசியது. அதற்கு மதுரைத் தோழர் வெண்புறா சரவணன் சூடான எதிர்வினை ஒன்றை அளித்துள்ளார். 

அதனை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். ராசா போன்ற கேவலமான விஷ ஜந்துக்களை சுதந்திரமாக திரிய விடுவது இந்திய மக்கள் ஒற்றுமைக்கு பேராபத்து. 


"நரிக்கு கண்ணு கிடை மீது"ன்னு ஒரு சொலவடை இருக்கு. சங்கிகளுக்குத்தான் இது கச்சிதமாக பொருந்தும்...

மருது சகோதரர்கள் நடத்தியது வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிரான வீரம் செறிந்த போர். அவன் கிருஸ்தவனா ஆரியனா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் அவர்களுக்கு நேரம் இருந்திருக்கவில்லை. எச்சை போன்ற வேலையத்த வெட்டி முண்டங்களிடம்தான் இந்த அற்பத்தனமான ஆராய்ச்சியும் சிண்டு முடியும் கெடுநோக்கமும் இருக்கிறது. இதை வைத்துத்தான் நூற்றாண்டுகளாக பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் ஒரு ட்விஸ்ட் என்னன்னா... வெள்ளையர்களின் கூட்டாளிகளான ஆற்காடு நவாப் என்ற 'முஸ்லீமையும்' தொண்டைமான் என்ற 'இந்துவையும்' இதில் குறிப்பிடவில்லை. அதைக் குறிப்பிட்டால், வரலாற்றை அறிந்தவர்கள் 1779 போரில் மருது சகோதரர்களின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த 'ஹைதர் அலி என்ற முஸ்லீமை' சுட்டிக்காட்டி ரிவிட் அடிப்பார்கள். மேலும் தொண்டைமானை இழுத்து தெருவில் விட்டதுபோல் ஆகிவிடும் என்று இந்த நரிக்குத் தெரியும்.

தியாகிகளும், துரோகிகளும் எல்லா மதங்கள் மற்றும் சாதிகளிலும் கலந்தே இருக்கிறார்கள்.

ஆகவே...

'வெள்ளை கிறிஸ்தவர்கள்' காலை நக்கி மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்த சாவர்க்கார் வாரிசு இந்த எச்.ராஜா சர்மாவுக்கு மருது சகோதரர்கள் பெயரை உச்சரிக்கக்கூடத் தகுதியில்லை.

---- வெண்புறா சரவணன்


பிகு: இன்று மாலை :
கோழை சாவர்க்கர் மன்னிப்பு மகாத்மியம்

No comments:

Post a Comment