Tuesday, October 12, 2021

இயல்பான கலைஞர் அவர்

 


நேற்று மறைந்த மலையாள திரைக் கலைஞர் திரு நெடுமுடி வேணு ஒரு இயல்பான கலைஞர்.

நான் பார்த்துள்ள சொற்ப மலையாளப் படங்களில் பெரும்பாலான படங்களில் அவர் இருந்துள்ளார்.

நல்ல பாடகரும் ரசிகரும் எப்படி இருப்பார்கள் என்பதற்கு பரதமும் ஹிஸ் ஹைனஸ் அப்துள்ளாவும் உதாரணம்.

நல்ல இசையை எப்படி ஆராதிக்கிறார் என்பதை எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலில் பாருங்கள்.

இந்தியன் சி.பி.ஐ அதிகாரியையும் மோகமுள் ரங்கண்ணாவையும் மறக்க முடியுமா?



கடந்த வருடம் கொரோனா காலத்தின் போது நம்பிக்கை அளிப்பதாய் அவரது பாடல் அமைந்திருந்தது.

துரத்தனும், தகர்க்கனும், ஒருமிச்சு நிற்கனும் என்ற பாடலை அவசியம்  பாருங்கள்.

மிகச் சிறந்த கலைஞனுக்கு மனமார்ந்த அஞ்சலி

No comments:

Post a Comment