Monday, October 4, 2021

கறுப்புக் கொடிக்கு காரேற்றி கொலை . . .

 மொட்டைச்சாமியார் ஆளும் மாநிலத்தில் நேற்று நடந்த கொடூர சம்பவம் இது.






லகிம்பூர் கேரி  என்ற மாவட்டத்தில் விவசாயிகள் போராடி வருகின்றனர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த மோடியின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பேணி,, போராட்டத்தை கொச்சைப்படுத்தி  பேசியதால் அந்த மனிதன் நேற்று சொந்த ஊருக்கு வர கறுப்புக் கொடி காண்பித்துள்ளார்கள். 

அதிலே கடுப்பான மந்திரியின் மகன் ஆசிஷ் மிஸ்ரா, போராட்டக்காரர்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு விவசாயிகள் இறந்துள்ளனர். அவர்களின் எதிர்வினை இன்னும் நான்கு உயிர்களை போக்கியுள்ளது.

பேயரசு ஆட்சியில் இப்படித்தான் நடக்குமா?

மோடி தன் மந்திரி மீது நடவடிக்கை எடுப்பாரா?

இல்லை. மாறாக பாதுகாப்பார்.

கொலைகார ஆட்சியில் கொலைகாரர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்!

No comments:

Post a Comment