Wednesday, October 6, 2021

பாண்டேவுக்கு இவ்ளோ வெறியா?

 


 

பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயைக் கடந்ததற்கு,  மாஜிக் கிரிகாலன் வடிவேலை மக்கள் கோபத்துடன் பார்த்தது போல  தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பி.டி.தியாகராஜனை மக்கள் பார்ப்பார்கள் என்றொரு மீம் போட்டுள்ளார் தந்தி டிவி முன்னாள் ஆசிரியரான ரங்கராஜ் பாண்டே.

 


நேர் கொண்ட பார்வையில் வக்கிரம் பிடித்த வக்கீல் பாத்திரத்தில் நடித்த பாண்டே அந்த கேரக்டராகவே சொந்த வாழ்க்கையிலும் மாறி விட்டார் போல.

 பெட்ரோல் விலை உயர்வதற்கு யார் காரணம் என்பது ஒரு ஊடகக்காரருக்கு தெரியாதா?

 மிகப் பெரிய பொருளாதார மேதை போல ப.சிதம்பரத்தை மடக்கி மடக்கி கேள்வி கேட்ட ரங்கராஜ் பாண்டேவிற்கு இந்த சின்ன விஷயம் கூட தெரியாதா?

 பெட்ரோல் விலை உயர்வுக்காக யார் மீது கோபப்பட வேண்டும் என்பது சீமான், அண்ணாமலை போன்ற மூடச்சங்கிகளுக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம், அதெல்லாம் ஒன்றிய அரசு செய்யும் அராஜகம் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

 பின் ஏன் பாண்டேவுக்கு இந்த வேண்டாத வேலை?

 தமிழ்நாட்டில் மட்டும் பெட்ரோல் விலை மூன்று ரூபாய் குறைவாக விற்று மோடியை அம்பலப்படுத்துகிறார்களே என்ற வெறி.

 மோடி, நிர்மலா வகையறக்கள் பெட்ரோல் விலையை உயர்த்தினால் தமிழ்நாட்டு மக்கள் மு.க.ஸ்டாலினையோ அல்லது பி.டி.தியாகராஜனையோ பார்க்கத்தான் செய்வார்கள்.

 பாண்டே போட்ட மீம் படி கோபத்தோடு அல்ல,

 “முன்பைப் போல இன்னும் கொஞ்ச ரூபாய் உங்களால் குறைக்க முடியுமா” என்று கனிவோடுதான் பார்ப்பார்கள்.

 தமிழ்நாட்டு மக்கள் கோபத்துடன் பார்க்க அவர்கள் ஒன்றும்

மோடியோ அல்லது மூடச்சங்கிகளோ இல்லையே!

 கவுண்ட மணி செந்திலிடம் சொன்னது போல தஞ்சாவூர் கோயிலில் கல்வெட்டாகவே இந்த மீமை பாண்டே செதுக்கி விட்டு அங்கேயே உட்காரலாம்.

 

அந்த கல்லாலேயே பாண்டேவுக்கு அடி விழும் என்பது மட்டும் உறுதி.

 

11 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. அடேய் அனாமதேயம். என்னை எப்படியாவது காலி செய்யனும்னு நீயும் இன்னும் சில உத்தம புத்திரர்களும் பல வருஷமா ஆசைப்பட்டு கடுமையா உழைக்கிறீங்க. அந்த கூட்டத்தில ஒரு ஒண்ணாம் நம்பர் யோக்கியர் என்னை சாட்சியில்லாம கொலை செய்வேன்னு கூட சொன்னாரு.. ஒரு நல்லவரோ சகுனி நடை என்றாரு.. இன்னொரு அதி உத்தமரோ, விபத்து ஏற்பட்ட காலத்தில் அமர்ந்து பேசியதை ஐந்து வருடம் கழித்தும் பேசுவதாய் கதை விட்டார். உங்களால் முடிவதை செய்து பாருங்கள். எல்லோருக்கும் என்னைப் பற்றியும் தெரியும். உங்க கூட்டத்தின் குணாம்சங்களும் நன்றாகவே தெரியும். எப்பேர்பட்ட நேர்மையாளர்கள் நீங்கள்! ஒளிந்து கொண்டு நீங்கள் ஒவ்வொரு வருடமும் ஏவும் அம்புகள் முனை மழுங்கி மொக்கையானாலும் விடாது முயற்சிப்பதற்கு வாழ்த்துக்கள். உங்களால் ஒரு மீசை வைத்த பொம்மை வேறு அசிங்கப்பட்டது.

      இதைப் படித்து விட்டு நெற்றிக் கண் திறக்க நீயெல்லாம் சிவன் இல்லை.

      இன்னொரு தோற்றுப் போனவரிடம் எலும்புத்துண்டுகளை பொறுக்கித் தின்று அந்தாள் காசை அழிக்கப் பார்க்கும் பிச்சைக்காரன் நீ.. பாவம் அந்த முட்டாள்.

      உன்னால் முடிந்தால் அனாமதேயமாக இல்லாமல் சொந்த அடையாளத்தோடு வா பார்ப்போம்.

      அது முடியாது. அதனால்

      கொஞ்ச நாள் லீவ் எடுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ.

      இல்லையென்றால் பாகாயத்தில் அனுமதி நிச்சயம். உன் கூட்டாளிகளுக்கும் சொல்லி வை.

      Delete
  2. கனிவோடுதான் பார்ப்பார்கள் - துண்டு சீட்டு எதோ தன் சொந்த காசை எடுத்து தருகிற மாதிரி எதுக்கு இந்த பில்டு அப்பு

    ReplyDelete
    Replies
    1. அரசு கஜானாதான். அநியாயமாக, அயோக்கியத்தனமாக விலையேற்றும் மோடியை கேள்வி கேட்க துப்பில்லாமல் மக்களின் சுமையை குறைப்பவர்கள் மீதுதான் உங்கள் வாய் நீளுகிறது. ஏ4 ஷீட் வைத்து படித்த அக்யூஸ்ட் நம்பர் 1, டெலி ப்ராம்ப்டர் வைத்து படிக்கும் மோடி, உளறுவாயன் அண்ணாமலை, பொய் புளுகன் சீமான் ஆகியோரை விட உங்களால் துண்டுச்சீட்டு என்று சொல்லப்படும் மு.க.ஸ்டாலின் எவ்வளவோ மேல்

      Delete
    2. உங்களுக்கும் சங்கிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
      நான் சாதாரணமான nri - எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை

      Delete
    3. உங்களுக்கும் சங்கிகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை
      நான் சாதாரணமான nri - எந்த கட்சியையும் சேர்ந்தவன் இல்லை

      Delete
    4. உங்களின் அபத்தமான பின்னூட்டத்திற்கு பதில் சொன்னால் சங்கியா? இதுதான் அப்பட்டமான சங்கித்தனம். அது என்ன அக்னி ராமா? நிஜப் பெயரா? புனைப் பெயரா?

      Delete
    5. என்னுடைய பாதி பெயர் உண்மையான பெயர்
      முழு பெயரை போட்டு கிரெடிட் கார்டு விஷயங்களில் மாட்ட தயார் இல்லை

      Delete
    6. அப்படியா! இந்த பதிவிலேயே ஒரு நாய்க்கு பதில் கொடுத்துள்ளேன். அந்த நாய் என் பெயரோடு இணைத்து ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். அது போன்ற ஃபேக் ஐ.டி யா என்று கேட்டேன். அதே போல இன்னொரு அயோக்கியன ஒரு தலைவர் பெயரில் ஃப்ஃக் ஐ.டி உருவாக்கி எழுதினான். அதனால் கேட்டேன். நீங்களும் வேறு எங்கும் கமெண்ட் போடுவதோ எழுதுவதோ இல்லை போலிருக்கே!

      Delete
  3. உடன் பிறப்புகள் திருட்டு தெலுங்கனை ஆதரிப்பார்கள்
    சங்கிகள் திருட்டு வட இந்தியர்களை ஆதரிப்பார்கள்
    மோசடியை தோல் உரிப்பது போல் தைரியம் இருந்தால் துண்டு சீட்டையும் உரியுங்களேன் பாப்போம் .

    ReplyDelete
    Replies
    1. மு.க.ஸ்டாலின் தவறு செய்தால் கண்டிப்பேன். எங்கே தைரியமிருந்தால் ஸ்டாலினை துண்டுச்சீட்டு என்று சொன்னது போல சீமானை புளுகாண்டி என்று சொல்லுங்கள் பார்ப்போம்.

      Delete