Saturday, October 10, 2020

இதற்கென்ன நடவடிக்கை எடப்பாடி?

 


தந்தை பெரியார் சிலைக்கு மாலையிட்டார்கள் என்பதற்காக கடலூர் மாவட்டத்தில் மூன்று காவலர்களை இட மாற்றம் செய்து நடவடிக்கை எடுத்துள்ள சங்கி பினாமி எடப்பாடியே

 






காவல்துறை சீரூடையோடு காவல் நிலையத்திற்குள்ளே பூஜை நடத்தும் காவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

அதிலும் அந்த கடைசி புகைப்படத்தில் இருக்கிறாரே, அந்த மனிதர்தான் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக இட மாற்றம் எடுத்த நபர். 

இப்போது தெரிகிறதா அந்த நடவடிக்கைக்கு பின்னே ஒளிந்திருக்கும் வெறி?

 சீருடை இல்லாமல் பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது நடவடிக்கை எடுக்க வேண்டிய அளவிற்கான தவறென்றால் சீருடையோடு காவல் நிலையத்திற்குள்  பூஜை செய்வது அதை விட மிகப் பெரிய தவறு கிடையாதா?

 

பூஜை செய்வது அவர்கள் நம்பிக்கை என்றால் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டென்றால், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அவருக்கு மரியாதை செய்வதென்பது அவர்கள் உரிமை கிடையாதா?

 

ஆட்சியின் இறுதிக்காலத்திலாவது சுய மரியாதையோடு இருக்க முயற்சியுங்கள். சங்கிகள் சொல்வதை கேட்டு அடிமையாக இருக்க வேண்டாம். தமிழனுக்கு சுய மரியாதையை கற்றுக் கொடுத்த தந்தை பெரியார் வேறு யாருமில்லை. உங்கள் கட்சிக் கொடியில் இருப்பவரின் தலைவர் . . .

 

No comments:

Post a Comment