Friday, October 9, 2020

வேள்பாரியின் வெற்றியும் விளக்கெண்ணெய் சங்கியும்

 



 குறுகிய காலத்திலேயே ஒரு மக்களவை உறுப்பினராக மிகச் சிறப்பான முத்திரை பதித்து வருகிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் சமீபத்திய வெற்றி பற்றி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா அவர்களின் பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 வாழ்த்துக்கள் தோழர் சு.வெ.

உங்கள் வெற்றிப் பயணம் தொடரட்டும்

 

மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர்

சு . வெங்கடேசனின் முயற்சிக்கு மற்றுமொரு வெற்றி!

 


மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் முயற்சியால் மத்திய தொல்லியல் துறையின் தொல்லியல் பட்டயப்படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழிகளின் வரிசையில் தமிழுக்கும் இடம் அளிக்கப்பட்டிருக்கிறது.

 

மத்திய தொல்லியல் துறையின்  தொல்லியல் பட்டயப் படிப்பில் சேருவதற்கு மத்திய அரசு சமீபத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அதில் அந்த படிப்பில் சேர்வதற்கான கல்வித்தகுதியில் சமஸ்கிருதம்  உள்ளிட்ட பல மொழிகள் சேர்க்கப்பட்டிருந்தன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழிக்கு அப்பட்டியலில் இடமில்லை.

 

இந்த விளம்பரத்தைப் பார்த்த மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினரும் நாடறிந்த எழுத்தாளருமான சு.வெங்கடேசன், இப்பிரச்சனையை மத்திய அரசின் கவனத்திற்கும் ஊடகங்களின் கவனத்திற்கும் கொண்டு வந்தார். பல்வேறு ஊடகங்களில் அவர் அளித்த பேட்டிகள் செம்மொழி தமிழ் புறக்கணிக்கப்படுவதற்கு பின்னால் இருக்கும் அரசியலை அம்பலப்படுத்தியதுடன், விளம்பர பட்டியலில் தமிழ் மொழியையும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பிலும் இக்கோரிக்கையை வலியுறுத்தி அறிக்கை வெளியிடப்பட்டது. திமுக தலைவர் மு ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சிகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். தமிழக அரசின் சார்பில்  பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் பழனிசாமி இதே கோரிக்கையை வலியுறுத்தி இருந்தார்.

 

இந்நிலையில் மத்திய அரசின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொல்லியல் பட்டயப் படிப்பிற்கான கல்வித்தகுதியில் செம்மொழி தமிழ் சேர்க்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சு.வெங்கடேசன் தொடர்ந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர் உட்பட  பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

சபாஷ் தோழா.. நீ கலக்கு!

 

இன்னொரு செய்தியையும் சொன்னால்தான் இந்த பதிவு முழுமை பெறும்.

 

தோழர் சு.வெ குரலெழுப்பிய உடன் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டு ஆணவத்தை மட்டுமே மண்டையில் வைத்திருக்கும் பாஜக சங்கி திருப்பதி நாராயணன் திமிரோடு ஒரு பதிவு போட்டார்.

 


இதற்கு தோழர் சு.வெ வே தக்க பதிலடி கொடுத்து விட்டார்.

 


இப்போது தோழர் சு.வெ சொன்னதுதான் சரி என்பது நிரூபணமாகி உள்ளது. விளக்கெண்ணெய் நாராயணன் இப்போது முகத்தை எங்கே வைத்துக் கொள்வார்.

 இதனால்தான் சொல்கிறோம் சங்கிகள் வாய் திறந்தாலே வெளி வருவது பொய் மட்டுமே.

No comments:

Post a Comment