Monday, October 12, 2020

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, சி.பி.ஐ மோசடியை ஆரம்பிச்சுட்டாங்க . . .



 ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரக் கொலை வழக்கை மொட்டைச் சாமியார் எப்போது சி.பி.ஐ க்கு மாற்றினாரோ, அப்போதே வழக்கின் மூடு விழா தொடங்கி விட்டது.

இன்று காலை நாளிதழில் பார்த்த செய்தி அதனை உறுதிப் படுத்தி விட்டது.

ஹாத்ராஸ் வழக்கு மாற்றப்பட்டவுடன் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனை தனது இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டது.

கூட்டுப் பாலியல் வன் புணர்ச்சி, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் இருந்துள்ளது.

கொஞ்ச நேரம்தான்.

எங்கிருந்து என்ன அழுத்தம் வந்ததோ?

சி.பி.ஐ அந்த F.I.R ஐ தன் இணைய தளத்திலிருந்து நீக்கி விட்டது. மோசடி விசாரணையின் முதல் கட்டம் இது.

அடுத்தடுத்த மோசடிகளையும் பார்க்கத்தானே பார்க்கத்தானே போகிறோம்!


No comments:

Post a Comment