Wednesday, October 28, 2020

அயோக்கியர்களுக்கு பதவி கொடுப்பவர்களும் . . .

 



மருத்துவர் என்று சொல்வதற்கே அருகதை இல்லாதவன். அவன் செய்த அசிங்கம் வெளியான போதே அவனை  பாதுகாக்கும் வேலையைத்தான் செய்தது பாஜக. இப்போது மோடி அரசு அவனுக்கு புதிய பதவி கொடுத்து அழகு பார்த்துள்ளது.

 கற்றோரை கற்றோரே காமுறுவர் என்பது பழைய மொழி.

 பொறுக்கிகளை பொறுக்கிகளே காமுறுவர்

 என்பது பாஜக உருவாக்கியுள்ள புதிய பொன்மொழி.

 மனுதர்மத்தில் சொல்லப்பட்டதை எடுத்துச் சொன்னதற்கே “பெண்களை இழிவு படுத்தி விட்டார் திருமாவளவன்” என்று குதித்த சங்கிகள் ஒருவர் கூட “அடுத்த வீட்டுப் பெண்ணின் வாசலில் சிறு நீர் கழித்த” இந்த உத்தமனின் செயலை பெண்களுக்கு இழைக்கப்பட்ட இழிவு என்று அப்போதும் கண்டிக்கவில்லை. இப்போதும் அவர்கள் வாய் திறந்து பேசாத படி கொழுக்கட்டையை வைத்து வாயை அடைத்துக் கொண்டிருப்பார்கள்.

 ஜெயேந்திர சரஸ்வதி, சிப்பு சேகர், குருமூர்த்தி சொன்னதோ, சுப்பையா செய்ததோ இவர்களுக்கு ஒரு சாதாரண விஷயமாகக் கூட தெரியவில்லை.

 “களவாணிப் பசங்க கூடத்தான் சகவாசம் வச்சிருக்கோம்” என்று தெரியாத வடிவேலு போன்ற அப்பாவிகளா இவர்கள்?

 பெண்களின் காவலராக புதிதாக வேஷம் கட்டியுள்ள ஒரு கண்ணியவான், சுப்பையா விவகாரம் குறித்து எழுதவே இல்லை.  அந்த உத்தமனை அடுத்த பதிவில் கவனித்துக் கொள்கிறேன்.

 சுப்பையா நியமனம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கரூர் எம்.பி செல்வி ஜோதிமணி சுகாதார அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதற்கு சங்கிகள் போட்டு வரும் பின்னூட்டங்களில் மிகவும் நாகரீகமாக உள்ள ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 


இப்போது சொல்லுங்கள் சங்கிகளா பெண்ணின் காவலர்கள்? இந்த திமிர்ப்பேச்சு மனுவின் பாரம்பரியமல்லாமல் வேறென்ன?

No comments:

Post a Comment