Sunday, June 20, 2021

அயோத்தி கோயில் - புது ஊழல்

 


இது அயோத்தியில் புதிதாக கண்டறியப்பட்ட ஊழல்.

அயோத்தி நகர மேயர் ரிஷிகேஸ் உபாத்யாயாவின் அண்ணன் மகன் தீப் நாராயணன் என்பவர் ராமர் கோயில் அருகாமையில் தேவேந்திர பிரசாதாச்சார்யா என்ற லோக்கல் ராமர் கோயில் பூசாரிக்கு சொந்தமான 890 சதுர மீட்டர் நிலத்தை 20 லட்சத்துக்கு பிப்ரவரி மாதம் வாங்குகிறார். அதன் சந்தை மதிப்பு 36.50 லட்சம்.

பூசாரியிடம் 16.5 லட்சம் குறைவாக வாங்கிய தீப் நாராயணன், மே மாதம் அதனை ராமர் கோயில் ட்ரஸ்டுக்கு இரண்டு கோடியே ஐம்பது லட்சத்துக்கு விற்கிறார்.

இவர்களின் கொள்கை, லட்சியம், இலக்கு எல்லாமே ராமர் கோயில் என்று தம்பட்டமடித்துக் கொண்டு இருந்தார்கள்.

அதிலேயே கோடிக்கணக்கில் ஊழல் செய்து கொள்ளையடிக்கும் பாஜக இந்திய கஜானாவிலிருந்து இதுவரை எவ்வளவு கொள்ளை அடித்திருப்பார்கள்?

ஆனால் முட்டாள் சங்கிகள் இப்போதும் மோடி வாழ்க என்றே கூச்சல் போடுவார்கள்.


No comments:

Post a Comment