Wednesday, June 30, 2021

ஐய்யோ! எலக்சன் வந்துருச்சே

 



சத்யராஜ், கவுண்டமணி, மணிவண்ணன் நடித்த “தாய் மாமன்” என்ற படத்தில் ஒரு காட்சி வரும்.

 தெரிவில் சாலை போட ஜல்லிக் கற்கள் கொட்டப்படும்,ரோடு ரோலரும் வந்து சாலை போடப்படும்.  காற்று வந்து கொண்டிருந்த வீதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் கொட்ட ஆரம்பிக்கும். “நம்ம ஊருக்கு எலக்சன் வந்துருச்சுடோய்” என்று மக்கள் உற்சாகக்குரல் கொடுப்பார்கள்.  

 அது காமெடி. ஆனால் இந்த பதிவு என் கவலையை வெளிப்படுத்த . . .

 

ஆம்.

 ஜம்முவில் ட்ரோன் மூலம் நடந்துள்ள வெடிகுண்டு தாக்குதல் உபியில் வரப் போகும் தேர்தலுக்கான முன்னோட்டமோ என்ற அச்சம் வருகிறது.

 அங்கே ஏற்கனவே உட்கட்சி மோதல் வேறு. மொட்டைச் சாமியாருக்கும் நல்ல பெயர் கிடையாது. அதனால் இப்படி ஏதாவது உசுப்பேத்தும் உணர்ச்சிகரமான சம்பவங்களை அரங்கேற்றித்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும்..

 ட்ரோன் மூலம்தான் தாக்குதல் நடந்ததாக ராணுவம் சொல்ல, அப்படி ட்ரோனின் சிதைவு எதுவும் கிடைக்கவில்லை என்று தேசிய புலனாய்வு முகவை சொல்கிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று.

தேர்தல் வெற்றிக்காக எந்த அளவும் கீழே இறங்கக் கூடியவர்கள் சங்கிகள். 2014 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக முசாபர்நகரில் கலவரத்தை நடத்தி “கலவரங்கள் தொடர்ந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும்” என்று அமித்ஷா கொக்கரித்ததை மறக்க முடியுமா!

 உபி தேர்தலுக்கு முன்பு காலாவதியாகிப் போன தண்டவாளங்களால் ஏற்பட்ட ரயில் விபத்தை “அன்னிய நாட்டு சதி” என்று மோடி பரப்புரை செய்த அயோக்கியத்தனத்தைத்தான் மன்னிக்க முடியுமா!

 இல்லை

 உளவுத்துறை எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்தி மத்திய பாதுகாப்புப் படை வீரர்களை பலி வாங்கிய புல்வாமா துயரம் என்ன மறக்கக் கூடிய கொடுமையா!

 


அய்யா மோடி வகையறாக்களே, உங்கள் தேர்தல் ஆதாயத்திற்காக, தயவு செய்து இந்திய மக்களின், வீரர்களின் உயிர்களோடு இம்முறையாவது விளையாட வேண்டாம். வழக்கம் போல கட்டுக்கதைகளை, போலி வாக்குறுதிகளை அள்ளி விடுங்கள்.

 உபி காரர்கள் ஒன்றும் தமிழர்கள் அளவிற்கு அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்கள் அல்லவே!

 

No comments:

Post a Comment