Friday, June 18, 2021

இதுதான் சங்கி புத்தி

 


நேற்று மிகவும் எரிச்சலூட்டிய ஒரு பதிவு


அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சிலரை மிக மோசமாக பாதித்துள்ளது.

அதனால்தான் இப்படி ஒரு பதிவு.

தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள், கலாச்சாரக் காவலர்கள் என்ற மேட்டிமை புத்தி மற்றவர்களை இழிவாக பார்க்க வைக்கிறது. சிதம்பரம் கோயில் அர்ச்சகர் பக்தரை தாக்கியதையும் தேவாரம் திருவாசகம் பாட முனைந்த ஆறுமுகசாமி ஓதுவாரை தீட்சிதர்கள் கெட்ட வார்த்தையில் திட்டி அடித்து நொறுக்கியதெல்லாம் இந்த பெண்மணிக்கு தெரியாது போல . . .

ஏதோ இவர்கள் வாயிலிருந்து மரியாதையான வார்த்தைகள் மட்டுமே வரும் என்று ஒரு நினைப்பு. மேலே சொல்லப்பட்டுள்ளதை விட கேவலமாக பேசுகிற  சமபிரதாயக் காவலர்கள் ஏராளமானவர்களை நான் அறிவேன்.

தோற்றுப் போயிருக்கிற போதே இவர்களுக்கு இவ்வளவு திமிர் என்றால், தமிழகத்தில் மட்டும் அதிமுக கூட்டணி வென்றிருந்தால் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்!

பிகு 1: இது போட்டோஷாப் இல்லை. அந்த பெண்மணியின்  ட்விட்டர் பக்கம் சென்றேன். இந்த குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. மற்ற பதிவுகள் இதே ரகம். கடைந்தெடுத்த சங்கி என்று நன்றாகவே தெரிகிறது. முந்தைய பதிவை ஏன் நீக்கினாய் என்று பலரும் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. 

பிகு 2 : இந்த பெண்மணி சரளமாக பேசியுள்ளதில் இருந்து கெட்ட வார்த்தைகள் பேசுவது அவருக்கு சர்வ சாதாரணம் என்று தெரிகிறது.

பிகு 3  :  கருத்துச் சுதந்திரத்தையும் அவதூறையும் பலர் குழப்பிக் கொள்கிறார்கள். அவதூறு என்பது இதுதான்.


No comments:

Post a Comment