Thursday, June 3, 2021

புதுவைக்கு பொங்குங்கய்யா

 


தமிழக அரசை கலைக்க வேண்டும், மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவர் பதவியேற்ற நாள் முதலாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

 அதே நேரம் புதுவை பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை.

 புதுவையில் ரங்கசாமி முதலமைச்சராக பதவி ஏற்றாரே தவிர அங்கே அமைச்சரவை இன்னும் பதவியேற்றகவில்லை.

 முதலமைச்சரும் கொரோனா தொற்று என்று கதவை சாத்திக் கொண்டு விட்டார்.  பத்து தொகுதிகளில் ரங்கசாமி காங்கிரஸும் ஆறு தொகுதிகளில் பாஜகவும் வென்றது. மூன்று பாஜக காரர்களை நியமன எம்.எல்.ஏ க்களாக்கி ஆறை ஒன்பதாக்கினார்கள். மூன்று சுயேட்சைகளை சேர்த்து ஒன்பதை பனிரெண்டாக்கி, உங்களை விட நாங்கள் இரண்டு அதிகம் என்று சொல்ல, முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்றவற்றை விட மருத்துவமனையே பாதுகாப்பானது என்று முதல்வர் நினைக்கிறார் போலும்.

 அங்கே ஆட்சி என்ற ஒரு நடைபெறவே இல்லை என்பதைப் பற்றி சங்கிகள் கவலைப்பட மாட்டார்களா? ரங்கசாமியை ராஜினாமா செய்யச் சொல்ல மாட்டார்களா?

 உண்மையில் அந்த முதல்வர் பதவியை அவரிடமிருந்து பறிக்கவே முயல்கின்றனர் என்பதுதான் உண்மை. ராஜினாமா செய் என்று சொல்லாமல் அதற்கான நிலைமையை அவருக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்ககள் என்பதும் உண்மை.

 ரங்கசாமிக்கும் இது தேவைதான்.

 

No comments:

Post a Comment