Thursday, June 24, 2021

நிரந்தரமானவர்கள், அழிவென்பதே இல்லை.

 


தமிழ்த் திரை இசையுலகில் நீண்ட காலம் ஒன்றாக பயணித்த கவியரசருக்கும் மெல்லிசை மன்னருக்கும் இன்று  பிறந்த நாள் என்பது அவர்கள் நட்பைப் போலவே சிறப்பானது.

கவியரசர் மறைந்து கிட்டத்தட்ட நாற்பதாண்டுகளாகப் போகிறது. மெல்லிசை மன்னர் மறைந்தும் ஆறாண்டுகள் கடந்து விட்டது.

"நான் நிரந்தரமானவன், எந்த நிலையிலும் எனக்கு அழிவு இல்லை" என்று கவியரசு பாடியது போல இருவரும் தங்கள் படைப்புக்கள் மூலம் வாழ்கிறார்கள், நிரந்தரமாக, தலைமுறைகள் தாண்டியும்.

அவர்கள் நினைவைப் போற்ற அவர்கள் கூட்டணியில் உருவான பத்து பாடல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

கவியரசு தேசிய விருது பெற்ற "தேவன் வந்தான், தேவன் வந்தான், குழந்தை வடிவிலே"



பி.சுசிலா தேசிய விருது பெற்ற "பால் போலவே வான் மீதிலே'




பி.சுசீலா தேசிய விருது பெற்ற "சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு"




வாணி ஜெயராம் தேசிய விருது பெற்ற "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்"



எம்.ஜி.ஆரின்  "விழியே கதை எழுது"




சிவாஜியின் "தேடினேன் வந்தது" (இந்த பாடல் எனக்கு ஏன் பிடிக்கும் என்ற ரகசியம் இரண்டு நாட்களுக்குப்பிறகு எழுதுகிறேன்)




கமலின் "காத்திருந்தேன், காத்திருந்தேன்"




ரஜினிக்கு எம்.எஸ்,வி யின் குரலிலேயே "சம்போ, சிவ சம்போ"




கவியரசு திரையில் தோன்றிய "பரமசிவன் கழுத்திலிருந்த பாம்பு"




இருவரின் கூட்டணியில் இறுதியாய் உருவான "மேகம் திரளுதடி"






இந்த பாடல்களை பதிவிட்ட பிற்குதான் நினைவுக்கு வந்த பாடல் ஒன்று. மெல்லிசை மன்னர் தன் இறுதி நாள் வரை கவியரசரின் நினைவாக ஒவ்வொரு மேடையிலும் பாடும் முதல் பாட்டு

"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே"




No comments:

Post a Comment