Monday, June 21, 2021

சங்கி சொன்னது சரிதான், ஆமாங்க


 

சங்கியே,கல்வியறிவு இருப்பதால்தான். . .

 ஒரு சங்கியின் ஆவேச ஆங்கில பதிவை இன்னொரு சங்கி முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தது.



 கல்வியறிவு  விகிதமே எல்லாமும் அல்ல.

 கன்னையா குமாரை பீகாரிகள் தோற்கடித்தனர். அதே நேரம் தமிழர்கள் அண்ணாமலை ஐ.பி.எஸ் ஸையும் மலையாளிகள் மெட்ரோ மேன் சீதரனையும் தோற்கடித்து விட்டனர்,

 அந்த சங்கிக்கு நான் பதில் கொடுத்தேன்.



கல்வியறிவில் இருந்த காரணத்தால்தான் தமிழர்கள் அண்ணாமலையையும் மலையாளிகள் சீதரனையும் மிகச் சரியாக தோற்கடித்து விட்டார்கள். கல்வியறிவில் பின் தங்கி இருப்பதால்தான் பீகாரிகள்  அறிவார்ந்த வாலிபனை தோற்கடித்து விட்டார்கள்.

இதுதானே உண்மை!

 கல்வியறிவில் வளர்ச்சி இருந்த காரணத்தால்தான் தமிழர்கள் அண்ணாமலையையும் மலையாளிகள் சீதரனையும் மிகச் சரியாக தோற்கடித்து விட்டார்கள். அண்ணாமலையின் ஐ.பிஎஸ் பதவியோ மெட்ரோ ட்ரெயின் உருவாக்கத்தில் சீதரனின் பணி சிறப்பாக இருந்தும் கூட காவிச்சாயம் பூசி பாஜக வேட்பாளராக நிற்கும் அவர்களை நிராகரிப்பதுதான் சரி என்று செயல்பட வைத்தமைக்கு கல்வியறிவில் தமிழர்களும் மலையாளிகளும் மேம்பட்டு இருப்பதுதான் காரணம். அதே போல கல்வியறிவில் பின் தங்கி இருப்பதால்தான் பீகாரிகள் கன்னையாகுமார் எனும் அறிவார்ந்த வாலிபனை தோற்கடித்து விட்டார்கள்.

சங்கி சொன்னது சரிதான். ஆனால் அது புரிந்து கொண்ட விதம்தான் அதன் அக்மார்க் மூடத்தனத்தை அம்பலப்படுத்தியது.


No comments:

Post a Comment